லிபியாவில் நடந்த மோதலில் 55 பேர் பலி

316

லிபியாவின் தலைநகர் திரிபோலியில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 55 ஆக உயர்ந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இத்தாக்குதல்களில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 150க்கும் அதிகமாகும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை (14) முதல் இரண்டு ஆயுதக் குழுக்களுக்கிடையில் இந்த மோதல் நிலைமை உருவாக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், இரு தரப்பும் போர் நிறுத்த உடன்படிக்கைக்கு இணக்கம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த மாதம் திரிபோலியில் நடந்த மோதலில் 32 பேர் உயிரிழந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here