follow the truth

follow the truth

May, 19, 2024
HomeTOP1ஜனாதிபதி மற்றும் பொஹட்டுவ பிரதிநிதிகளுக்கு இடையில் அவசர சந்திப்பு

ஜனாதிபதி மற்றும் பொஹட்டுவ பிரதிநிதிகளுக்கு இடையில் அவசர சந்திப்பு

Published on

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரதிநிதிகள் குழுவிற்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று தற்போது இடம்பெற்று வருகின்றது.

இந்த கலந்துரையாடல் இன்று (18) முற்பகல் 11.30 மணியளவில் ஜனாதிபதி செயலகத்தில் ஆரம்பமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம், பாராளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான்ன, பொதுஜன பெரமுனவின் முன்னாள் உள்ளுராட்சி மன்ற தலைவர்கள் ஆகியோர் இந்த கலந்துரையாடலில் கலந்துகொண்டுள்ளனர்.

உள்ளுராட்சி மன்றத் தேர்தல் தாமதமானதால் வேட்புமனுவைச் சமர்ப்பித்த தமது உறுப்பினர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டுவருவதே இந்த கலந்துரையாடலின் நோக்கம் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர் நாயகம் சாகர காரியவசம் தெரிவித்தார்.

தேர்தல் நீடிப்பதால், நியமனம் செய்யப்பட்ட உள்ளூராட்சி மன்றங்களின் முன்னாள் பிரதிநிதிகள் கடும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளதாகவும், அரச உத்தியோகத்தர்கள் சிலர் தமது பணிகளில் பல்வேறு இடையூறுகளை எதிர்கொண்டுள்ளதாகவும் பொதுச் செயலாளர் சுட்டிக்காட்டினார்.

LATEST NEWS

MORE ARTICLES

சிங்கப்பூரில் ஒரே வாரத்தில் 25,900 பேருக்கு கொவிட்

சிங்கப்பூரில் மீண்டும் புதிய கொரோனா தொற்று பரவல் வேகமெடுக்க தொடங்கியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. மே 5 முதல் 11...

இரண்டு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து

கேகாலை - அவிசாவளை வீதியில் கொட்டபொல பகுதியில் இன்று (18) மாலை 4.00 மணியளவில் இரண்டு தனியார் பேருந்துகள்...

எல்ல – வெல்லவாய வீதிக்கு மீண்டும் பூட்டு

சீரற்ற காலநிலை காரணமாக எல்ல - வெல்லவாய வீதி இன்று (18) இரவு 08.00 மணி முதல் நாளை...