மின் உற்பத்தி நிலையங்களுடன் தொடர்புடைய நீர்த்தேக்கங்களின் கொள்ளளவு தற்போது 23% ஆக குறைந்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
ரந்தெனிகலவின் கொள்ளளவு 8.1% ஆகவும் விக்டோரியா நீர்த்தேக்கத்தின் கொள்ளளவு 27% ஆகவும் குறைந்துள்ளது.
சமனல ஏரி நீர்த்தேக்கத்தின் கொள்ளளவும் மொத்த கொள்ளளவில் 1.9% ஆக குறைந்துள்ளது.
இத்தகைய நிலைமைகளின் கீழ், இந்த நாட்டின் மின்சாரத் தேவையில் 80% நிலக்கரி மற்றும் அனல் மின்சாரம் மூலம் வழங்கப்படுகிறது.
இதேவேளை, 100 மெகாவோட் மின்சாரத்தை 6 மாத காலத்திற்கு கொள்வனவு செய்வதற்கு இலங்கை மின்சார சபைக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.