follow the truth

follow the truth

August, 23, 2025
HomeTOP1ஜனாதிபதி சிங்கப்பூருக்கு

ஜனாதிபதி சிங்கப்பூருக்கு

Published on

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சிங்கப்பூருக்கான இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு நாளை (21) அதிகாலை சிங்கப்பூருக்கு செல்லவுள்ளார்.

ஜனாதிபதி தனது விஜயத்தின் போது, ​​சிங்கப்பூர் ஜனாதிபதி ஹலிமா யெகெப்பைச் (Halimah Yacob) சந்தித்து, சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங் (Lee Hsien Loong), சிங்கப்பூர் பாதுகாப்பு அமைச்சர் நெங் எங் ஹென்(Ng Eng Hen), நிலைத்தன்மை மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் கிரேஸ் ஃபூ ஹை ஐயன் (Grace Fu Hai Yien) ஆகியோருடன் இருதரப்புப் பேச்சுக்களை நடத்த உள்ளார்.

சர்வதேச கார்பன் வர்த்தகத்தின் கீழ் பசுமைக்குடில் வாயு வெளியேற்றத்தை குறைக்கும் நோக்கத்துடன் செலவு குறைந்த முறையில் ஒத்துழைக்க நாடுகளுக்கு வாய்ப்பளிக்கும் வாய்ப்பை பாரிஸ் ஒப்பந்தத்தின் 6வது பிரிவு வழங்குகிறது, அதன்படி, கார்பன் விவகாரத்தில் இலங்கை அரசுக்கும் சிங்கப்பூர் அரசுக்கும் இடையிலான ஒத்துழைப்பு பாரிஸ் உடன்படிக்கையின் கட்டமைப்பிற்குள் நடுநிலைமை, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் சிங்கப்பூர் பிரதமருக்கு இடையிலான கலந்துரையாடலின் பின்னர் புரிந்துணர்வு ஒப்பந்தமும் கைச்சாத்திடப்படும்.

தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிமனையின் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, காலநிலை மாற்றம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ருவான் விஜேவர்தன, பொருளாதார விவகாரங்களுக்கான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் கலாநிதி ஆர்.எச்.எஸ். சமரதுங்கவும் இந்த விஜயத்தில் ஜனாதிபதியுடன் இணைந்து கொள்ளவுள்ளார்.

இதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடளாவிய ரீதியில் வெளியில் உள்ள காலப்பகுதியில் ஜனாதிபதியின் கீழ் உள்ள அமைச்சுக்களை மேற்பார்வையிட நான்கு பதில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதன்படி, நாளை மற்றும் நாளை மறுதினம் (22) ஜனாதிபதி நாட்டிலிருந்து வெளியில் இருக்கும் போது, ​​பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சராக, நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க, நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சர், தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத், தொழில்நுட்ப அமைச்சராகவும், சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அனுபா பாஸ்குவால் பெண்கள், சிறுவர் விவகாரங்கள் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...