follow the truth

follow the truth

May, 1, 2025
HomeTOP1IMF கடன் நிபந்தனைகள் பற்றிய புதிய நிலைப்பாடு

IMF கடன் நிபந்தனைகள் பற்றிய புதிய நிலைப்பாடு

Published on

இலங்கை அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்துடன் முன்வைத்த நிபந்தனைகளில் 35 வீதமானவையே பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக Verité Research தெரிவிக்கின்றது.

சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்தின் முன்னேற்றத்தை அளக்க நிறுவனம் அறிமுகப்படுத்திய திட்டத்தின் படி இது தெரியவந்துள்ளது.

இந்த ஆண்டு ஜூலை மாதத்திற்குள், திட்டத்தின் நிபந்தனைகளில் 57 சதவீதம் பூர்த்தி செய்யப்பட்டிருக்க வேண்டும், ஆனால் 35 சதவீதம் மட்டுமே பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக Verité Research சுட்டிக்காட்டுகிறது.

அதன்படி, நிதி நிதியத்தால் ஒப்புக் கொள்ளப்பட்ட காலக்கெடுவின்படி இலங்கை முன்னேறவில்லை என்று அந்த நிறுவனங்கள் கூறுகின்றன.

செப்டெம்பர் மாத முதல் மீளாய்வுக்கு முன்னர் இலங்கை அரசாங்கம் 71 சதவீத நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும் எனவும், எனவே அரசாங்கம் ஒவ்வொரு மாதமும் ஆகஸ்ட் மற்றும் செப்டெம்பர் மாதங்களில் 18 நிபந்தனைகளை நிறைவேற்ற வேண்டும் எனவும் குறித்த அறிக்கையில் Verité Research சுட்டிக்காட்டியுள்ளது.

எவ்வாறாயினும், சர்வதேச நாணய நிதியத்தில் ஏற்படுத்தப்பட்ட நிபந்தனைகளில் 80 சதவீதமானவை ஏற்கனவே பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய குறிப்பிட்டுள்ளார்.

“.. எங்களிடம் இருந்த பல சவாலான ஒப்பந்தங்களை நாங்கள் முடித்துள்ளோம். சர்வதேச நாணய நிதியமும் இதை மிகவும் உன்னிப்பாக கவனித்து வருகிறது. எனவே, அந்த சவாலான ஒப்பந்தங்களில் 80% க்கும் அதிகமானவற்றை நாங்கள் அடைந்துள்ளோம் என்று நான் நம்புகிறேன். எங்களுக்கு சிறிது நேரம் இருக்கிறது. அந்த நேரத்தில் மற்ற விஷயங்கள் முடியும் என்று நாங்கள் நம்புகிறோம். எனவே, இரண்டாம் தவணை பெறுவதில் எந்தப் பிரச்சினையும் இருக்காது என நம்புகிறேன்.. “ என்றார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு

தனது பெயர் மற்றும் புகைப்படத்தை சட்டவிரோதமாக பயன்படுத்துவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு...

இலஞ்சம், ஊழல் விசாரணை ஆணைக்குழுவிலிருந்து வெளியேறினார் ரணில்

வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சற்றுமுன்னர் அங்கிருந்து வௌியேறியுள்ளார். நாடாளுமன்ற...

உயர்நீதிமன்றில் சாட்சியமளித்த மைத்திரி

2008 ஆம் ஆண்டு பொரலஸ்கமுவ பகுதியில் நடந்த தற்கொலை குண்டுவெடிப்பு தாக்குதல் தொடர்பான வழக்கில் சாட்சியாகப் பெயரிடப்பட்ட முன்னாள்...