follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுஹரக் கட்டாவிடம் வாக்குமூலம் பெற CID இற்கு அனுமதி

ஹரக் கட்டாவிடம் வாக்குமூலம் பெற CID இற்கு அனுமதி

Published on

தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வரும் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான “ஹரக் கட்டா” என அழைக்கப்படும் நந்துன் சிந்தகவிடம் வாக்குமூலம் பெற CID விசேட புலனாய்வுப் பிரிவினருக்கு கோட்டை நீதவான் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரும் பாதாள உலக தலைவருமான மாகந்துரே மதுஷின் சீடர்களான “ஹரக் கட்டா” என்ற நந்துன் சிந்தக மற்றும் “குடு சலிந்து” ஆகியோர் அண்மையில் மடகஸ்கரில் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட கரக் கட்டா உள்ளிட்ட சந்தேக நபர்கள் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரின் விசேட பாதுகாப்பின் கீழ் கட்டுநாயக்காவிலிருந்து குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு பாதுகாப்பு வாகனங்கள் மூலம் அழைத்துச் செல்லப்பட்பட்டு தடுப்புக்காவலில் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தங்க விலையில் சற்றே குறைவு

இன்று (17) தங்கத்தின் விலை பவுண் ஒன்றுக்கு 1,000 ரூபாவால் குறைவடைந்துள்ளதாக, கொழும்பு செட்டியார் தெரு தங்க நகை...

பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியவர்கள் குறித்து தகவல் வழங்க WhatsApp இலக்கம்

பிள்ளைகளால் புறக்கணிக்கப்பட்டு, தங்குமிடம் தேவைப்படும் முதியவர்கள் குறித்த தகவல்களை வழங்குவதற்காக முதியோருக்கான தேசிய செயலகம் வட்ஸ்-அப் இலக்கமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி,...

லெபனானில் வசிக்கும் இலங்கையர்களுக்கு விசேட அறிவித்தல்

ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் நிலவும் பதற்றமான சூழ்நிலை காரணமாக லெபனானில் வசிக்கும் இலங்கையர்களுக்கு அங்குள்ள இலங்கை தூதரகம் அறிவிப்பை...