follow the truth

follow the truth

August, 25, 2025
HomeTOP1ரயில் பயணிகளுக்கான விசேட அறிவித்தல்

ரயில் பயணிகளுக்கான விசேட அறிவித்தல்

Published on

பயணிகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் இன்று (24) ரயில்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

நேற்று (23) பிற்பகல், புகையிரத கட்டுப்பாட்டாளரை தாக்கிய சம்பவம் தொடர்பில் புகையிரத மின்சார உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து மின்சார ஊழியர்கள் குழுவொன்று அவசர தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது.

இதன் காரணமாக நேற்றிரவு அனைத்து புகையிரத பாதைகளிலும் புகையிரத தாமதம் ஏற்பட்டதாகவும், அங்கு பயணிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்திருந்தனர்.

இருப்பினும் ரயில்வே அதிகாரிகள் தலையிட்டு ரயில் சேவையினை வழமைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுத்ததையடுத்து ரயில் மீண்டும் இயக்கப்பட்டது.

இதேவேளை, இன்றைய தினம் சிறந்த முறையில் ரயில்களை இயக்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

ரயில்வே பொது மேலாளர் டபிள்யூ.ஏ.டி.எஸ். குணசிங்க ரயில் தாமதங்களைத் தவிர்த்து அனைத்து ரயில்களையும் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

இதேவேளை, நிறுவனத்தின் நடைமுறைகளை பின்பற்றாத ஊழியர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...