follow the truth

follow the truth

August, 25, 2025
HomeTOP1காலி சிறைச்சாலையில் இருந்து வெளிப்பட்ட கொடிய பாக்டீரியா குறித்த தற்போதைய நிலை

காலி சிறைச்சாலையில் இருந்து வெளிப்பட்ட கொடிய பாக்டீரியா குறித்த தற்போதைய நிலை

Published on

காலி சிறைச்சாலையில் மெனிங்கோகோகல் பாக்டீரியா (MENINGOCOCCAL BACTERIA) தொற்று பரவும் அபாயம் இதுவரை கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக காலி மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் சோமரத்ன கோனார தெரிவித்துள்ளார்.

மெனிங்கோகோகல் பாக்டீரியாக்கள் மேலும் பரவுவதைக் கட்டுப்படுத்த சுகாதாரத் துறைகள் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

காலி, உனவடுனவில் உள்ள மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் நேற்று (23) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

காலி சிறைச்சாலையில் 13 நோயாளிகள் பாக்டீரியா தொற்றுக்கு உள்ளாகி குணமடைந்துள்ளதாகவும் இருவர் உயிரிழந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிறைக்கு வெளியே இந்த பாக்டீரியா பரவவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஆனால், சொறியுடன் ஏற்படுவதாகக் கூறப்படும் இந்த மெனிங்கோகோகல் பாக்டீரியம், குழந்தைகளுக்கு அதிக தீங்கு விளைவிப்பதாகவும், போதைப்பொருள் பாவனையால் உடல்நிலை பலவீனமடைந்தவர்களும் உயிரிழப்பதாகவும் வைத்தியர்கள் கூறுகின்றனர்.

இந்நிலையில், Meningococcal – Meningitis குறித்து மக்கள் தேவையில்லாத அச்சம் கொள்ள வேண்டாம் என தொற்றுநோயியல் துறை தெரிவித்துள்ளது.

ஒவ்வொரு வருடமும் இவ்வாறான பல நோயாளிகள் பதிவாகுவதாக அதன் பணிப்பாளர் வைத்தியர் சமித்த கினிகே தெரிவித்தார்.

காலி சிறைச்சாலையில் கைதிகள் குழுவொன்று திடீரென சுகவீனமடைந்த நிலையில் அவர்கள் மூளைக்காய்ச்சல் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதன்படி, இந்நோய் பரவுவது தொடர்பில் மக்கள் தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை என நிபுணர் வைத்தியர் சமித்த கினிகே தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...