follow the truth

follow the truth

July, 10, 2025
HomeTOP1பெரஹராவை காண கண்டியில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது

பெரஹராவை காண கண்டியில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது

Published on

கண்டி ஸ்ரீ தலதா மாளிகையின் எசல பெரஹரா திருவிழாவின் மூன்றாவது நிகழ்வான ரந்தோலி பெரஹெரா இன்று (28) வீதி உலா வருகிறது.

இரவு 07:00 மணிக்குப் பிறகு 15 நிமிடங்களுக்கு, தெற்கு முகமாக உள்ள சிவ் மகாதேவால பெரஹெராவுடன் ஊர்வலம் ஸ்ரீ தலதா மாளிகையிலிருந்து தொடங்குகிறது. சேனநாயக்க தெரு, கந்தா தெரு, டி.எஸ். சேனநாயக்கா தெரு வழியாக ராஜா தெரு வரை செல்லும்.

தற்போது ஊர்வலத்தை காண இலட்சக்கணக்கான உள்ளூர் மற்றும் வெளியூர் மக்கள் கண்டிக்கு வந்து செல்வதாகவும், கண்டியில் உள்ள சுற்றுலா விடுதிகள் மற்றும் ஓய்வு விடுதிகளில் உள்ள அனைத்து அறைகளும் நிரம்பியுள்ளதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.

தற்போது சில கடத்தல்காரர்கள் ரந்தோலி பெரஹெரா பார்க்கும் ஆசனங்களை 50,000 ரூபா அதிக விலைக்கு விற்பனை செய்வதாகவும் கண்டி நகருக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கைக்கு 30 வீத வரி விதிப்பு – அமெரிக்க ஜனாதிபதி அறிவிப்பு

இலங்கையின் உற்பத்தி பொருட்களுக்கு 30 வீத தீர்வை வரியை அறவிடவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். ஜனாதிபதி...

களுத்துறை நகர அபிவிருத்தித் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல்

மேல் மற்றும் தென் மாகாணங்களுக்கு இடையிலான பிரதான நகரமாக களுத்துறை நகரத்தை அபிவிருத்தி செய்யும் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான...

மஸ்கெலியா கங்கேவத்த த.வி பாடசாலையின் மீள் புனரமைப்பு செய்யப்பட்ட வகுப்பறை திறந்து வைப்பு

ஹட்டன் கல்வி வலயத்தில் கோட்டம் 3, மஸ்கெலியா கங்கேவத்த தமிழ் வித்தியாலயத்தின் தரம் 6ற்கான மீள் புனரமைப்பு செய்யப்பட்டு...