follow the truth

follow the truth

August, 27, 2025
HomeTOP1நுண்ணுயிர் எதிர்ப்பி தடுப்பூசியினால் உயிரிழந்த நோயாளியின் உடல் உறுப்புகள் வெளிநாட்டுக்கு

நுண்ணுயிர் எதிர்ப்பி தடுப்பூசியினால் உயிரிழந்த நோயாளியின் உடல் உறுப்புகள் வெளிநாட்டுக்கு

Published on

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் Co-amoxiclav எனும் நுண்ணுயிர் எதிர்ப்பி தடுப்பூசியை செலுத்தியதன் பின்னர் உயிரிழந்த நோயாளியின் இரத்த மாதிரிகள் மற்றும் உடல் பாகங்களை பரிசோதனைக்காக வெளிநாட்டுக்கு அனுப்ப தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தலைமையில் சுகாதார அமைச்சில் நேற்று (28) இடம்பெற்ற கலந்துரையாடலில் அமைச்சின் செயலாளர், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், தேசிய மருந்தக ஒழுங்குமுறை அமைப்பின் தலைவர் ஆகியோர் கலந்துகொண்ட கலந்துரையாடலில் இந்த அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

50 வயதுடைய இந்த நோயாளி வெட்டுக்காயங்களுடன் வரக்காபொல ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

அங்கு, Co-amoxiclav என்ற நுண்ணுயிர் எதிர்ப்பி தடுப்பூசியை செலுத்திய பின்னர் அவர் இறந்தார், பின்னர் நாட்டின் அனைத்து வைத்தியசாலைகளிலும் அது தொடர்புடைய ஆண்டிபயாடிக் இனது உபயோகம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...