பாராளுமன்ற ஆங்கில பாடநெறியில் 5 பேர் தேர்ச்சி

1754

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான தேசிய மொழி கற்கைகள் மற்றும் பயிற்சி நிறுவனத்தினால் ஆங்கில பாடநெறி ஒன்று நடத்தப்பட்டு, ஐந்து எம்.பி.க்கள் மாத்திரமே அதனை வெற்றிகரமாக முடித்து சான்றிதழ்களை பெற்றுள்ளனர்.

தகுதி பெற்ற ஐந்து பேரில் தேசியப் பட்டியல் உறுப்பினரும் கேகாலை மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவரும் காலி, குருநாகல் மற்றும் மொனராகலை மாவட்டங்களைச் சேர்ந்த மூன்று உறுப்பினர்களும் அடங்குவர்.

முதற்கட்டமாக, சுமார் 15 எம்.பி.க்கள் பாடநெறியில் சேர்ந்தனர், படிப்படியாக அந்த எண்ணிக்கை குறைந்துள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர்களின் வசதிக்காக, இந்த பாடநெறி பாராளுமன்ற அமர்வு நாட்களுக்கு மட்டுமே வரையறுக்கப்பட்டது, மேலும் பாராளுமன்ற உறுப்பினர்கள் தவிர, 42 பாராளுமன்ற ஊழியர்களும் இதில் சேர்ந்து பாடநெறியினை தொடர்ந்தமையும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here