follow the truth

follow the truth

June, 17, 2025
Homeவிளையாட்டுமுத்த சர்ச்சை ; தாய் உண்ணாவிரதம்

முத்த சர்ச்சை ; தாய் உண்ணாவிரதம்

Published on

ஸ்பெயின் கால்பந்து சங்க தலைவர் லூயிஸ் ரூபியேல்ஸின் தாயார், உண்ணாவிரதத்தின் இரண்டாம் நாளில் நீதிக்காக இறப்பேன் என சபதம் செய்துள்ளார்.

சிட்னியில் நடந்த மகளிர் உலகக்கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியில், ஸ்பெயின் வெற்றி பெற்று முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. கோப்பையை வென்ற தமது அணி வீராங்கனைகளுக்கு ஸ்பெயின் கால்பந்து சங்க தலைவர் லூயிஸ் ரூபியேல்ஸ் கட்டியணைத்து பாராட்டு தெரிவித்தார். அப்போது அவர் ஜென்னி ஹெர்மோசோவின் உதட்டில் முத்தமிட்டது பெரும் சர்ச்சையாக வெடித்தது.

அதனைத் தொடர்ந்து அவர் மீது கண்டனங்கள் எழுந்ததைத் தொடர்ந்து லூயிஸ் ரூபியேல்ஸ் இடைநீக்கம் செய்யப்பட்டார். ஆனால் அவர் தனது பதவியை ராஜினாமா செய்ய மறுத்து விட்டதால், ஸ்பெயினின் மகளிர் பயிற்சியாளர்கள் மொத்தமாக ராஜினாமா செய்தனர். இந்நிலையில், லூயிஸ் ரூபியேல்ஸின் தாயார் ஏஞ்சல்ஸ் பெஜார் (72) தனது மகனுக்கு நீதி கிடைக்க வேண்டும், அவர் குற்றமற்றவர் எனக் கூறி உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார்.

ஓய்வு பெற்ற சிகையலங்கார நிபுணரான ஏஞ்சல்ஸ் பெஜார், தேவாலயத்திற்குள் இருப்பதாக அறிக்கைகள் கூறும் நிலையில், அவர் திரவ உணவுகளை மட்டுமே எடுத்துக் கொள்வதாக கூறப்படுகிறது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மேத்யூஸின் இறுதிப் போட்டி இன்று – நாணய சுழற்சியில் பங்களாதேஷ் வெற்றி

பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்...

இலங்கை – பங்களாதேஷ் டெஸ்ட் தொடர் நாளை ஆரம்பம்

பங்களாதேஷுக்கு எதிராக நாளை (17) ஆரம்பமாகவுள்ள 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை முன்னிட்டு 18 வீரர்களைக் கொண்ட...

உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் மகுடத்தை சூடியது தென் ஆபிரிக்கா

நடப்பு சாம்பியன் அவுஸ்திரேலியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 3-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட் இறுதிப்போட்டி லண்டன் லார்ட்சில்...