follow the truth

follow the truth

May, 14, 2024
Homeவிளையாட்டுமுத்த சர்ச்சை ; தாய் உண்ணாவிரதம்

முத்த சர்ச்சை ; தாய் உண்ணாவிரதம்

Published on

ஸ்பெயின் கால்பந்து சங்க தலைவர் லூயிஸ் ரூபியேல்ஸின் தாயார், உண்ணாவிரதத்தின் இரண்டாம் நாளில் நீதிக்காக இறப்பேன் என சபதம் செய்துள்ளார்.

சிட்னியில் நடந்த மகளிர் உலகக்கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியில், ஸ்பெயின் வெற்றி பெற்று முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. கோப்பையை வென்ற தமது அணி வீராங்கனைகளுக்கு ஸ்பெயின் கால்பந்து சங்க தலைவர் லூயிஸ் ரூபியேல்ஸ் கட்டியணைத்து பாராட்டு தெரிவித்தார். அப்போது அவர் ஜென்னி ஹெர்மோசோவின் உதட்டில் முத்தமிட்டது பெரும் சர்ச்சையாக வெடித்தது.

அதனைத் தொடர்ந்து அவர் மீது கண்டனங்கள் எழுந்ததைத் தொடர்ந்து லூயிஸ் ரூபியேல்ஸ் இடைநீக்கம் செய்யப்பட்டார். ஆனால் அவர் தனது பதவியை ராஜினாமா செய்ய மறுத்து விட்டதால், ஸ்பெயினின் மகளிர் பயிற்சியாளர்கள் மொத்தமாக ராஜினாமா செய்தனர். இந்நிலையில், லூயிஸ் ரூபியேல்ஸின் தாயார் ஏஞ்சல்ஸ் பெஜார் (72) தனது மகனுக்கு நீதி கிடைக்க வேண்டும், அவர் குற்றமற்றவர் எனக் கூறி உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார்.

ஓய்வு பெற்ற சிகையலங்கார நிபுணரான ஏஞ்சல்ஸ் பெஜார், தேவாலயத்திற்குள் இருப்பதாக அறிக்கைகள் கூறும் நிலையில், அவர் திரவ உணவுகளை மட்டுமே எடுத்துக் கொள்வதாக கூறப்படுகிறது.

LATEST NEWS

MORE ARTICLES

ஊக்கமருந்து குற்றச்சாட்டில் செமினிக்கு கருத்துக் கூற வாய்ப்பு

ஊக்கமருந்து பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட வலைப்பந்து வீராங்கனை செமினி அல்விஸிடம் தேசிய ஒழுக்காற்று குழு இன்று (14) அவர்...

கிரிக்கெட் வீரர் அசித பெர்னாண்டோவின் Pre wedding photoshoot

அசித பெர்னாண்டோ இலங்கை கிரிக்கெட் அணியின் திறமையான பந்துவீச்சாளர். அவர் எப்போதும் போட்டிகளை மாற்றக்கூடிய ஒரு பந்துவீச்சாளராக அறியப்படுகிறார். பந்துவீச்சில் எதிரணி...

இலங்கை கிரிக்கெட் அணிக்கு ஜனாதிபதி வாழ்த்து

அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் ஜூன் 01 ஆம் திகதி முதல் ஜுன் 29ஆம் திகதி வரை நடைபெறவுள்ள...