follow the truth

follow the truth

May, 14, 2024
Homeஉள்நாடு'அஸ்வெசும' விவகாரங்கள் 1924 எனும் இலக்கத்திற்கு அழைக்கவும்

‘அஸ்வெசும’ விவகாரங்கள் 1924 எனும் இலக்கத்திற்கு அழைக்கவும்

Published on

சுமார் 689,803 அஸ்வெசும பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் 4.395 பில்லியன் ரூபாய் ஏற்கெனவே வைப்பிலிடப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார். 

அடையாளம் காணப்பட்ட 2 மில்லியன் அஸ்வெசும பயனாளிகளில், 1.5 மில்லியன் பயனாளிகளுக்கான கொடுப்பனவுகள் வழங்கும் பணிகள் கட்டம் கட்டமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் செவ்வாய்க்கிழமை (29) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே மேற்குறிப்பிட்ட விடயத்தை அவர் குறிப்பிட்டார்.

‘அஸ்வெசும’ குறித்த அனைத்து விபரங்களையும் 1924 என்ற துரித தொலைபேசி எண் மூலம், வார நாட்களில் காலை 9 மணி முதல் 4.00 மணி வரை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தெரிவித்தார்.

ஊனமுற்றோர், முதியோர், சிறுநீரக நோயாளர் ஆகியோருக்கான கொடுப்பனவுகள் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.

LATEST NEWS

MORE ARTICLES

சிசு செரிய பஸ் சேவை எண்ணிக்கையை 2000 வரை அதிகரிக்க நடவடிக்கை

அடுத்த வருடம் பாடசாலை மாணவர்களுக்கு மேலும் 500 சிசு செரிய பஸ் சேவைகளை வழங்கி அதன் எண்ணிக்கையை 2000...

வெசாக் அலங்காரங்களுக்கு பிளாஸ்டிக் பயன்படுத்த வேண்டாம்

வெசாக் பண்டிகையின் போது செய்யப்படும் பல்வேறு அலங்காரங்களுக்கு பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக்கை பயன்படுத்த வேண்டாம் என மத்திய சுற்றாடல்...

மண்சரிவு அபாய எச்சரிக்கை

நாட்டின் பல பகுதிகளில் பெய்து வரும் கடும் மழை காரணமாக மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, பதுளை, கண்டி,...