ரயில் சேவையில் தாமதம்

102

புத்தளம் புகையிரத பாதை குடுவெவ பிரதேசத்தில் மரம் ஒன்று முறிந்து வீழ்ந்தமையினால் அந்த பாதையின் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

மரத்தை அகற்றும் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

அதன்படி, கொழும்பில் இருந்து செல்லும் ரயில்கள் பங்கதெனிய ரயில் நிலையம் வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதுடன், புத்தளத்திலிருந்து வரும் ரயில்கள் நாத்தாண்டிய ரயில் நிலையம் வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

மரங்களை அகற்றும் பணி முடியும் வரை அந்த மார்க்கத்தில் சிறிய அளவிலான ரயில்கள் தாமதமாக செல்லும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here