follow the truth

follow the truth

August, 24, 2025
Homeஉலகம்ஜி-20 மாநாட்டில் பங்கேற்க இந்தியா வருகிறார் ஜோ பைடன்

ஜி-20 மாநாட்டில் பங்கேற்க இந்தியா வருகிறார் ஜோ பைடன்

Published on

ஜி-20 நாடுகள் அமைப்பின் உச்சி மாநாடு வருகிற 9 மற்றும் 10ம் திகதி இந்திய தலைநகர் டெல்லியில் நடைபெறுகிறது.

இதற்கான ஏற்பாடுகளை மத்திய அரசு செய்து வருகிறது. ஜி-20 மாநாடு நடத்த பிரமாண்ட மாநாட்டு கட்டிடம் வடிவமைக்கப்பட்டு உள்ளது.

இந்தியாவில் நடைபெறும் ஜி-20 மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன் பங்கேற்கிறார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. ரஷிய ஜனாதிபதி புதின், சீன ஜனாதிபதி ஜின்பிங் ஆகியோர் பங்கேற்க மாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற நாட்டு தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள். இந்த நிலையில் ஜி-20 மாநாட்டில் பங்கேற்பதற்காக அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன் வருகிற 7-ந் திகதி இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்கிறார் என்று வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.

ஜி-20 மாநாட்டுக்கு முன்பாக 8-ந் திகதி ஜோபைடன் இந்திய பிரதமர் மோடியுடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்துவார் என்றும் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது;

ஜி-20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி ஜோபைடன் 7ம் திகதி இந்தியாவுக்கு வருகிறார். 8ம் திகதி இந்திய பிரதமர் மோடியுடன் ஜனாதிபதி ஜோபைடன் இரு தரப்பு சந்திப்பில் பங்கேற்கிறார். 9 மற்றும் 10ம் திகதிகளில் ஜி-20 மாநாட்டில் பங்கேற்கிறார். அதில் ஜனாதிபதி ஜோபைடன், மற்ற உறுப்பு நாட்டு தலைவர்கள், தூய்மையான எரிசக்தி மாற்றம், காலநிலை மாற்றத்தை எதிர்த்து போராடுவது உள்ளிட்ட உலகளாவிய பிரச்சினைகளை சமாளிப்பதற்காக கூட்டு முயற்சிகள் குறித்து விவாதிப்பார்கள் என்று தெரிவித்துள்ளது. ஜோபைடன்-மோடியின் இரு தரப்பு பேச்சு வார்த்தையில் இரு நாட்டு வர்த்தகம், பாதுகாப்பு, பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இது ஒரு இறந்த பொருளாதாரம் – இந்திய பொருளாதாரம் மீது டிரம்பின் கடுமையான குற்றச்சாட்டு

இந்தியாவில் இருந்து ஏற்றுமதி ஆகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். ரஷியாவிடம் இருந்து...

உலகில் யாரிடமும் இல்லாத தனிப்பட்ட இரத்த வகை

கர்நாடகாவைச் சேர்ந்த பெண்ணொருவருக்கு உலகிலேயே யாரிடமும் இதுவரை பதிவாகாத புதிய வகை இரத்தம் இருப்பது தெரியவந்துள்ளது. இது மருத்துவத்...

கனடாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை முன்னெடுப்பது கடினம் – ட்ரம்ப்

பலஸ்தீனத்தை அங்கீகரிப்பதாக கனடா பிரதமர் அறிவித்ததையடுத்து, கனடாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை முன்னெடுத்துச் செல்லும் விஷயம் மிகவும் கடினமானதாக இருப்பதாக...