இன்று முதல் தனியாரிடம் இருந்து மின்சாரம்

659

தனியாரிடம் இருந்து மின்சாரம் வாங்குவதை தொடங்கி, ஏ.எஸ். அம்பிலிபிட்டிய மின் உற்பத்தி நிலையம் இன்று (02) தென் மாகாணத்துடன் இணைக்கப்படவுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

மின்சார சபையின் பல அனல்மின் நிலையங்களின் அலகு விலையை விட தனியாரிடமிருந்து கொள்வனவு செய்யப்படும் ஒரு யூனிட் மின்சாரம் குறைவாக இருப்பதாக அமைச்சர் கூறினார்.

இரண்டு தனியார் மின்சார விநியோக நிறுவனங்களான ஏ.எஸ். மாத்தறை மின் நிலையத்திலிருந்து ஒரு யூனிட் மின்சாரத்திற்கு 55 ரூபாயும், ஏ.எஸ். அம்பிலிபிட்டிய அனல்மின் நிலையத்தில் இருந்து 54 ரூபாவிற்கு மின்சார அலகு கொள்வனவு செய்யப்படுவதாக தெரிவித்த அமைச்சர், மின்சார சபைக்கு சொந்தமான களனிதிஸ்ஸ அனல்மின் நிலையத்தில் மின்சார அலகு ஒன்றை உற்பத்தி செய்வதற்கு 143 ரூபா செலவாகும் எனவும் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here