follow the truth

follow the truth

August, 24, 2025
HomeTOP1இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் இந்திய உணவுப் பொருட்களின் விலையில் அதிகரிப்பு

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் இந்திய உணவுப் பொருட்களின் விலையில் அதிகரிப்பு

Published on

இந்தியாவில் உணவுப் பொருட்களின் விலை வேகமாக உயர்ந்து வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதுவரை இந்திய உணவுப் பொருட்களின் விலை 11 சதவீதம் அதிகரித்துள்ளது. கிட்டத்தட்ட 100 ஆண்டுகளில் இல்லாத மோசமான காலநிலை மாற்றத்தின் தாக்கமே இந்த நிலைக்கு உடனடி காரணம்.

இதன்படி பருப்பு விலை 20 வீதத்திற்கும் மேலாக அதிகரித்துள்ளதாகவும் வெங்காயத்தின் விலையும் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. வெங்காயத்திற்கும் 40 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது. பாஸ்மதி அல்லாத வெள்ளை அரிசி ஏற்றுமதிக்கு திடீரென தடை விதித்த இந்தியா, கோதுமை மாவு ஏற்றுமதிக்கு ஏற்கனவே தடை விதித்துள்ளது. சர்க்கரை ஏற்றுமதிக்கு தடை விதிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக இந்திய பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

கடந்த பத்தாண்டுகளாக உலக சந்தையில் 40 சதவீத அரிசியை இந்தியா ஏற்றுமதி செய்து வருகிறது. சர்க்கரை மற்றும் வெங்காயம் ஏற்றுமதியில் உலகின் இரண்டாவது பெரிய நாடு இந்தியா. உலக விவசாய வர்த்தகத்தில் முதன்மையான நாடுகளில் ஒன்றான இந்தியாவில் உணவுப் பொருட்களின் விலை உயர்வு உலக உணவுச் சங்கிலியையும் பாதிக்கும் என்று வெளிநாட்டு ஊடகங்கள் கணித்துள்ளன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...