follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP1எரிவாயு விலை குறித்து இன்று இறுதி தீர்மானம்

எரிவாயு விலை குறித்து இன்று இறுதி தீர்மானம்

Published on

உள்நாட்டு எரிவாயு விலை இன்று திருத்தப்படவுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இன்று காலை நடைபெறவுள்ள ஊடகவியலாளர் மாநாட்டில் இது தொடர்பில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

12.5 கிலோகிராம் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 900 முதல் 1000 ரூபா வரை அதிகரிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உலக சந்தையில் எரிவாயுவின் விலை அதிகரிப்பே எரிவாயு விலை அதிகரிப்புக்கு காரணம் என லிட்ரோ நிறுவனத்தின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் டெய்லி சிலோனுக்கு தெரிவித்தார்.

நாட்டில் எரிபொருட்களின் விலை அதிகரிப்பு காரணமாக போக்குவரத்துக் கட்டணங்கள் அதிகரிப்பு எரிவாயு விலை திருத்தத்திலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

உலக சந்தையில் எரிவாயு விலையை கருத்தில் கொண்டு, கடந்த மாதமும் எரிவாயு விலையை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால் நாட்டில் போதுமான எரிவாயு இருப்பு இருப்பதால், எரிவாயு விலை திருத்தப்படவில்லை.

கடந்த ஜூலை மாதம், கடைசியாக எரிவாயு விலை திருத்தம் செய்யப்பட்டு, அதன்படி, 12.5 கிலோகிராம் சமையல் எரிவாயு சிலிண்டர் தற்போது 2,982 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 05 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 1,198 ரூபாவாகும்.

2.3 கிலோ கிராம் சமையல் எரிவாயு சிலிண்டர் தற்போது 561 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகிறது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உற்பத்தித்திறன் மேம்பாட்டுக்கான சர்வதேச பயிற்சி நிகழ்ச்சித் திட்டம்

ஆசிய உற்பத்தித்திறன் அமைப்பின் (APO) ஆதரவுடன் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட உற்பத்தித்திறன் நிபுணர்களின் மேம்பாட்டுக்கான சர்வதேச...

தொழிலுக்காக இஸ்ரேலுக்கு இலங்கையர்களை அனுப்புவது இடைநிறுத்தம்

இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காக இலங்கையர்களை அனுப்புவது தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண்...

2028 ஆம் ஆண்டாகும்போது, சொந்த முயற்சியின் மூலம் கடனை திருப்பிச் செலுத்தக்கூடிய பொருளாதார வளர்ச்சியும், ஸ்திரத்தன்மையும் நாட்டில் உருவாக்கப்படும்

2028 ஆம் ஆண்டளவில் நாம் செலுத்த வேண்டிய வெளிநாட்டுக் கடன்களை சொந்த முயற்சியின் மூலம் செலுத்தக் கூடிய பொருளாதார...