follow the truth

follow the truth

September, 1, 2025
HomeTOP1கண் அறுவை சிகிச்சை நிறுத்தப்படும் ஆபத்து

கண் அறுவை சிகிச்சை நிறுத்தப்படும் ஆபத்து

Published on

நாடு முழுவதும் உள்ள வைத்தியசாலைகளில் காண்டாக்ட் லென்ஸ்கள் பற்றாக்குறை காரணமாக அனைத்து வைத்தியசாலைகளிலும் கண் அறுவை சிகிச்சைகள் நிறுத்தப்படும் அபாயம் இருப்பதாக சுகாதார அமைச்சின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதன் காரணமாக கண் அறுவை சிகிச்சை காத்திருப்போர் பட்டியலில் சேர்க்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சுகாதார அமைச்சின் மருத்துவ வழங்கல் பிரிவின் மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் பற்றிய தகவல்களை உள்ளடக்கிய ‘ஸ்வஸ்த’ கணினி அமைப்பு, எந்த வைத்தியசாலையிலும் கான்டாக்ட் லென்ஸ்கள் இல்லை என நேற்று (3) பிற்பகல் தெரிவித்துள்ளது.

கொழும்பு தேசிய கண் வைத்தியசாலையில் மாத்திரம் சுமார் 5,000 காண்டாக்ட் லென்ஸ்கள் பிரித்தானியாவினால் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. எவ்வாறாயினும், நாடளாவிய ரீதியில் உள்ள வைத்தியசாலைகளில் மாதாந்த கண் சத்திரசிகிச்சைகளை மேற்கொள்வதற்கு 15,000 காண்டாக்ட் லென்ஸ்கள் தேவைப்படுகின்றன. இந்த ஆண்டு ஜனவரி 23 ஆம் திகதி ஏழு வகையான காண்டாக்ட் லென்ஸ்களை வழங்குவதற்கு, அரச மருந்து ஒழுங்குமுறைக் கூட்டுத்தாபனத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

ஒப்புதலின்படி, இரண்டு டெண்டர்கள் நிறைவேற்றப்பட்ட போதிலும், இரண்டு சப்ளையர்களுக்கிடையிலான சர்ச்சைக்குரிய சூழ்நிலை காரணமாக, காண்டாக்ட் லென்ஸ்கள் கொண்டு வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பில் சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்தவிடம் கேட்டபோது, ​​காண்டாக்ட் லென்ஸ்கள் தட்டுப்பாடு மற்றும் டெண்டர் கோருவது குறித்து இந்த வாரம் அமைச்சரவைக்கு அறிவிக்கப்படும் எனத் தெரிவித்திருந்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...