follow the truth

follow the truth

August, 24, 2025
HomeTOP1உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு நாடாளுமன்றத்தில் அறிவிப்பு

உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு நாடாளுமன்றத்தில் அறிவிப்பு

Published on

உள்நாட்டு இறைவரித் திருத்தச் சட்டமூலத்தை சாதாரண பெரும்பான்மையுடன் நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற முடியும் என உயர் நீதிமன்றம் நாடாளுமன்றத்திற்கு அறிவித்துள்ளது.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (05) நாடாளுமன்றத்தில் இதனை அறிவித்தார்.

அரசாங்கத்தினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட உள்நாட்டு இறைவரித் திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை கடந்த ஆகஸ்ட் 28 ஆம் திகதி முடிவடைந்தது.

அதன்படி, இந்த தீர்ப்பு சபாநாயகருக்கு அனுப்பப்படும் என உயர் நீதிமன்றம் அறிவித்தது.

தேசிய மக்கள் சக்தியின் செயற்பாட்டாளரான சதுரங்க அபேசிங்க உள்ளிட்ட இருவரால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இது தொடர்பாக, நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தனது டுவிட்டர் கணக்கில் ஒரு குறிப்பைப் பதிவிட்டு, தேசிய கடன் சீரமைப்பு திட்டத்தை தாமதப்படுத்துவதன் மூலம், வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்பை சீர்குலைக்க பல அரசியல் சக்திகள் செயற்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...