follow the truth

follow the truth

May, 15, 2024
HomeTOP1"ஐ.ம.சு.கூட்டமைப்பின் முறையான செயலாளர் நாயகம் நான்"

“ஐ.ம.சு.கூட்டமைப்பின் முறையான செயலாளர் நாயகம் நான்”

Published on

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் முறையான செயலாளர் நாயகம் தாம் என்றும், சட்டச் செயலாளர் நாயகம் யார் என்பதை எதிர்வரும் காலங்களில் நீதிமன்றம் தீர்மானிக்கும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

சிலர் நிர்வாக சபை கூட்டங்களை நடத்திய போதும் ஊடகவியலாளர் மாநாடு நடத்துவதற்கு சட்டரீதியாக அவர்களுக்கு உரிமையில்லை என தெரிவித்த அமைச்சர், தற்போது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளராக செயற்படும் நபரை தாம் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என தேர்தல் ஆணையாளர் தெரிவித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

எனவே ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளராக தோன்றுவதற்கு அந்த நபருக்கு தார்மீக அல்லது சட்டரீதியான உரிமை கிடையாது என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 72வது மாநாடு வெகு விமரிசையாக நடைபெற்றதாகவும், இதில் பிரதமர், முன்னாள் ஜனாதிபதி திருமதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆகியோர் கலந்து கொண்டு, அனைவரையும் கட்சியில் இணையுமாறு கேட்டுக் கொள்வதாகவும் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

விவசாய அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மஹிந்த அமரவீர மேற்கண்டவாறு தெரிவித்தார்.

LATEST NEWS

MORE ARTICLES

காலநிலை தாக்கம் இல்லாவிட்டால் தேயிலை உற்பத்தியில் சாதனை செய்ய முடியும்

”இலங்கையில் பெருந்தோட்டத்துறையில் ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு இந்த நிறுவனம் மிகவும் முக்கியமானதாகும்எனவும் இங்கு நல்ல கல்வி வழங்குவதற்கான சூழல் உள்ளது....

கல்வி நிர்வாக மறுசீரமைப்புக்கான சுற்றுநிருபம் விரைவில்

கல்வி நிர்வாக சீர்திருத்தத்தின் ஆரம்ப கட்டமாக நாடளாவிய ரீதியில் 1220 கொத்தணிப் பாடசாலைகள் உருவாக்கப்படுவதுடன், அவற்றைக் கண்காணிக்க 350...

வர்த்தமானி குறித்து இதுவரை முறைப்பாடுகள் கிடைக்கவில்லை

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1700 ரூபா சம்பளத்தை வழங்குவது தொடர்பில் வெளியிடப்பட்ட வர்த்தமானி குறித்து பெருந்தோட்ட நிறுவனங்களிடமிருந்து இதுவரையில் எவ்வித...