follow the truth

follow the truth

August, 24, 2025
HomeTOP1"ஐ.ம.சு.கூட்டமைப்பின் முறையான செயலாளர் நாயகம் நான்"

“ஐ.ம.சு.கூட்டமைப்பின் முறையான செயலாளர் நாயகம் நான்”

Published on

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் முறையான செயலாளர் நாயகம் தாம் என்றும், சட்டச் செயலாளர் நாயகம் யார் என்பதை எதிர்வரும் காலங்களில் நீதிமன்றம் தீர்மானிக்கும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

சிலர் நிர்வாக சபை கூட்டங்களை நடத்திய போதும் ஊடகவியலாளர் மாநாடு நடத்துவதற்கு சட்டரீதியாக அவர்களுக்கு உரிமையில்லை என தெரிவித்த அமைச்சர், தற்போது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளராக செயற்படும் நபரை தாம் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என தேர்தல் ஆணையாளர் தெரிவித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

எனவே ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளராக தோன்றுவதற்கு அந்த நபருக்கு தார்மீக அல்லது சட்டரீதியான உரிமை கிடையாது என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 72வது மாநாடு வெகு விமரிசையாக நடைபெற்றதாகவும், இதில் பிரதமர், முன்னாள் ஜனாதிபதி திருமதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆகியோர் கலந்து கொண்டு, அனைவரையும் கட்சியில் இணையுமாறு கேட்டுக் கொள்வதாகவும் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

விவசாய அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மஹிந்த அமரவீர மேற்கண்டவாறு தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...