follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP1"ஐ.ம.சு.கூட்டமைப்பின் முறையான செயலாளர் நாயகம் நான்"

“ஐ.ம.சு.கூட்டமைப்பின் முறையான செயலாளர் நாயகம் நான்”

Published on

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் முறையான செயலாளர் நாயகம் தாம் என்றும், சட்டச் செயலாளர் நாயகம் யார் என்பதை எதிர்வரும் காலங்களில் நீதிமன்றம் தீர்மானிக்கும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

சிலர் நிர்வாக சபை கூட்டங்களை நடத்திய போதும் ஊடகவியலாளர் மாநாடு நடத்துவதற்கு சட்டரீதியாக அவர்களுக்கு உரிமையில்லை என தெரிவித்த அமைச்சர், தற்போது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளராக செயற்படும் நபரை தாம் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என தேர்தல் ஆணையாளர் தெரிவித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

எனவே ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளராக தோன்றுவதற்கு அந்த நபருக்கு தார்மீக அல்லது சட்டரீதியான உரிமை கிடையாது என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 72வது மாநாடு வெகு விமரிசையாக நடைபெற்றதாகவும், இதில் பிரதமர், முன்னாள் ஜனாதிபதி திருமதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆகியோர் கலந்து கொண்டு, அனைவரையும் கட்சியில் இணையுமாறு கேட்டுக் கொள்வதாகவும் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

விவசாய அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மஹிந்த அமரவீர மேற்கண்டவாறு தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உற்பத்தித்திறன் மேம்பாட்டுக்கான சர்வதேச பயிற்சி நிகழ்ச்சித் திட்டம்

ஆசிய உற்பத்தித்திறன் அமைப்பின் (APO) ஆதரவுடன் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட உற்பத்தித்திறன் நிபுணர்களின் மேம்பாட்டுக்கான சர்வதேச...

தொழிலுக்காக இஸ்ரேலுக்கு இலங்கையர்களை அனுப்புவது இடைநிறுத்தம்

இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காக இலங்கையர்களை அனுப்புவது தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண்...

2028 ஆம் ஆண்டாகும்போது, சொந்த முயற்சியின் மூலம் கடனை திருப்பிச் செலுத்தக்கூடிய பொருளாதார வளர்ச்சியும், ஸ்திரத்தன்மையும் நாட்டில் உருவாக்கப்படும்

2028 ஆம் ஆண்டளவில் நாம் செலுத்த வேண்டிய வெளிநாட்டுக் கடன்களை சொந்த முயற்சியின் மூலம் செலுத்தக் கூடிய பொருளாதார...