follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP1மருத்துவ தேவைக்காக கஞ்சா பயிர்ச்செய்கைக்கு அனுமதி

மருத்துவ தேவைக்காக கஞ்சா பயிர்ச்செய்கைக்கு அனுமதி

Published on

மருத்துவ தேவைக்காக கஞ்சா பயிர்ச்செய்கைக்கு அனுமதி வழங்கப்படும் என்றும், ஆயுர்வேத சட்டக் கோவையின் வர்த்தமானி அறிவித்தல் மூலம் எதிர்காலத்தில் இது குறித்து அறிவிக்கப்படும் என்றும் உள்ளுர் மருத்துவ இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயக்கொடி நேற்று (05) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

கஞ்சா பயிர்ச்செய்கைக்கு வணிகப் பயிராக ஊக்குவிப்பதாகவும், மேலும் சில மருந்துகளை வணிகப் பயிர்களாக ஊக்குவிக்க வேண்டும், இல்லையெனில் பாரம்பரிய மருத்துவம் மறைந்துவிடும் என்றும் அவர் கூறினார். ஆயுர்வேத திருத்தச் சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் போதே இராஜாங்க அமைச்சர் இதனை தெரிவித்தார்.

பொரளை ஆயுர்வேத வைத்தியசாலையின் பெயர் ஆயுர்வேத தேசிய வைத்தியசாலை என திருத்தப்படவுள்ளதாகவும், ஆயுர்வேத திணைக்களத்தை வினைத்திறனாக்கும் வகையில் ஆயுர்வேத ஆணையாளர் பதவி இந்த சட்டத்தின் மூலம் ஆயுர்வேத ஆணையாளர் நாயகமாக தரமுயர்த்தப்படும் எனவும் உள்ளுர் மருத்துவ இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உற்பத்தித்திறன் மேம்பாட்டுக்கான சர்வதேச பயிற்சி நிகழ்ச்சித் திட்டம்

ஆசிய உற்பத்தித்திறன் அமைப்பின் (APO) ஆதரவுடன் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட உற்பத்தித்திறன் நிபுணர்களின் மேம்பாட்டுக்கான சர்வதேச...

தொழிலுக்காக இஸ்ரேலுக்கு இலங்கையர்களை அனுப்புவது இடைநிறுத்தம்

இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காக இலங்கையர்களை அனுப்புவது தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண்...

2028 ஆம் ஆண்டாகும்போது, சொந்த முயற்சியின் மூலம் கடனை திருப்பிச் செலுத்தக்கூடிய பொருளாதார வளர்ச்சியும், ஸ்திரத்தன்மையும் நாட்டில் உருவாக்கப்படும்

2028 ஆம் ஆண்டளவில் நாம் செலுத்த வேண்டிய வெளிநாட்டுக் கடன்களை சொந்த முயற்சியின் மூலம் செலுத்தக் கூடிய பொருளாதார...