follow the truth

follow the truth

May, 20, 2024
HomeTOP1Channel 4 குற்றச்சாட்டை மறுக்கும் கோட்டாபய

Channel 4 குற்றச்சாட்டை மறுக்கும் கோட்டாபய

Published on

இலங்கை தொடர்பில் சேனல் 4 வெளியிட்ட சமீபத்திய காணொளி தொடர்பில் விளக்கமளித்து முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் ஈஸ்டர் தாக்குதலுக்கும் தனக்கும் எச்சித்க தொடர்பும் இல்லை என்றும், உரிய தாக்குதலுக்கு தொடர்புடையவர்கள் குறித்து விசாரணைக்கு தானே உத்தரவு அளித்த தாகவும் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மேலும் சேனல் 4 இன் இந்த சமீபத்திய படம், 2005 முதல் ராஜபக்ச ஆட்சியைக் கொச்சைப்படுத்தும் நோக்கில் ராஜபக்சவுக்கு எதிரான தாக்குதலாகும். முன்பு இதே சேனலால் இலங்கை பற்றி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் ஆவணப்படங்கள் போலவே இதுவும் பொய்களின் கூட்டம். என்னை ஜனாதிபதியாக அமர்த்துவதற்காக இஸ்லாமிய தீவிரவாதிகளின் குழு கொடிய குண்டுவெடிப்புகளை நடத்தியதாக கூறுவது முற்றிலும் அருவருப்பானது எனவும் அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அரசியல் நிலைப்பாட்டில் இருந்து சிலர் என்மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்தாலும், நான் பொதுப் பதவியில் இருந்த போதெல்லாம் ரோமன் கத்தோலிக்க சமூகத்திற்கு தனிப்பட்ட முறையில் அனைத்து சேவைகளையும் செய்துள்ளேன் என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கபப்ட்டுள்ளது.

குறித்த அறிக்கையானது;

LATEST NEWS

MORE ARTICLES

மிக முக்கியமான சட்டமூலங்கள் மே 22 பாராளுமன்றில்

நாட்டின் பொருளாதாரத்திற்கு மிகவும் முக்கியமான இரண்டு சட்டமூலங்களை மே மாதம் 22 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க அரசாங்கம்...

இலங்கையில் நாளை துக்க தினம்

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைஷி மறைவையொட்டி நாளை(21) துக்க தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து அரசாங்க அலுவலகங்களிலும் தேசியக் கொடி அரைக்கம்பத்தில்...

ரைசியின் மரணத்தால் ஒன்றுபடும் இஸ்லாமிய நாடுகள்

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் மரணம் மூன்றாம் உலகப்போரின் தொடக்கமாக கூட அமையலாம் என்று உலக அரசியல் வல்லுனர்கள்...