follow the truth

follow the truth

May, 3, 2025
HomeTOP1Channel 4 அறிக்கை பற்றி ஆராய ஜனாதிபதியிடமிருந்து குழு

Channel 4 அறிக்கை பற்றி ஆராய ஜனாதிபதியிடமிருந்து குழு

Published on

‘ஈஸ்டர் ஞாயிறு’ தாக்குதல் தொடர்பாக பிரித்தானியாவின் ‘சேனல் 4’ ஒளிபரப்பிய நிகழ்ச்சி குறித்து விரிவான விசாரணை நடத்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார்.

இதன்படி, ‘சேனல் 4’ அம்பலப்படுத்தப்பட்டமை தொடர்பில் முறையான விசாரணைகளை மேற்கொள்வதற்காக ஓய்வுபெற்ற அரச சிரேஷ்ட அதிகாரிகள் மூவர் அடங்கிய குழுவொன்றை நியமிக்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.

பொலிஸ், சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் சிவில் சேவையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இந்தக் குழுவை நியமிக்க பாதுகாப்புச் சபைக் கூட்டம் தீர்மானித்துள்ளது. குழுவின் பிரதிநிதிகள் நியமனம் ஜனாதிபதியின் தலைமை அதிகாரி சாகல ரத்நாயக்க மற்றும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமன்றி, ‘சேனல் 4’ அம்பலப்படுத்தல் தொடர்பில் ஆராய்வதற்காக நாடாளுமன்றத் தெரிவுக்குழுவொன்றை நியமிப்பதற்கும் ஜனாதிபதி தீர்மானித்துள்ளதுடன், ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளர் பிரசன்ன ரணதுங்கவிற்கு அந்தப் பணியை வழங்கியுள்ளார்.

இந்த குழு அல்லது தெரிவுக்குழுவிடம் எந்தவொரு நபரும் தமது ஆதாரங்கள் மற்றும் தகவல்களை முன்வைப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

எதிர்வரும் 6 ஆம் திகதி மதுபானசாலைகளுக்குப் பூட்டு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் காரணமாக நாடளாவிய ரீதியில் அனைத்து மதுபானசாலைகளும் எதிர்வரும் 6 ஆம் திகதி மூடப்படும் என...

LTTE வசமிருந்து இராணுவத்தினால் மீட்கப்பட்ட தங்கம், வெள்ளி பதில் பொலிஸ்மா அதிபரிடம் கையளிப்பு

யுத்த காலத்தில் LTTE வசமிருந்து இராணுவத்தினால் கைப்பற்றப்பட்ட பொதுமக்களின் தங்கம் மற்றும் வௌ்ளி பதில் பொலிஸ்மா அதிபரிடம் உத்தியோகபூர்வமாக...

தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் நாளை நள்ளிரவுடன் நிறைவு

வாக்கெடுப்பிற்கு நாற்பத்தெட்டு(48) மணி நேரத்திற்கு முன்னர் அதாவது மே மாதம் 03 ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணிக்குப்...