follow the truth

follow the truth

July, 10, 2025
Homeபொலிட்டிக்கல் மேனியா“ஐயோ அண்ணா, நான் இன்னும் சின்னவள்…” – 20 வயது இளைஞன் கைது

“ஐயோ அண்ணா, நான் இன்னும் சின்னவள்…” – 20 வயது இளைஞன் கைது

Published on

மொரவக்க பிரதேசத்தில் 15 வயதுடைய பாடசாலை மாணவியை வன்புணர்வுக்கு உட்படுத்தியதாக கூறப்படும் 20 வயதுடைய சந்தேக நபர் ஒருவரை நேற்று (07) தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை கைது செய்துள்ளதுடன், அதிபருக்கும் ஏனையோருக்கும் நிர்வாண காணொளிகளை WhatsApp சமூக ஊடகங்களில் அனுப்பியுள்ளார்.

சந்தேக நபர் சிறுமியை தனது வீட்டில் வைத்து 11 தடவைகள் வன்புணர்வு செய்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சிறுமியின் பெற்றோர் வேலைக்காக வீட்டை விட்டு வெளியேறிய போது, ​​சந்தேக நபர் வந்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், சந்தேக நபர் தனது கையடக்கத் தொலைபேசியில் குறித்த சம்பவத்தினை பதிவு செய்ததாகவும் விசாரணை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இவ்வாறு எடுக்கப்பட்ட நிர்வாண வீடியோ காட்சிகளை சந்தேகநபர் தனது நண்பர்களுக்கு வாட்ஸ்அப் சமூக ஊடகங்கள் மூலம் அனுப்பி வைத்துள்ளதாகவும், அந்த காட்சிகள் பெண் பாடசாலை அதிபருக்கும் கிடைத்துள்ளதாகவும் பொலிஸார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை பாதிக்கப்பட்ட சிறுமியை சிறுவர் இல்லத்திற்கு அனுப்பிவைத்து சந்தேக நபரை மொரவக நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சட்டத்தை மீறுபவர் ஒருபோதும் சட்டமியற்றுபவராக இருக்க முடியாது

சட்டத்தை மீறுபவர் ஒருபோதும் சட்டமியற்றுபவராக இருக்க முடியாது என கொட்டாஞ்சேனை நல்லாயன் கன்னியர் மடம் (Good Shepherd Convent)...

தமிழ் மொழியை கொச்சைப்படுத்தும் வகையில் எதிரணிசெயற்படுவது கவலையளிக்கின்றது

தமிழ் மொழியை கொச்சைப்படுத்தும் வகையில் எதிரணி செயற்படுவது கவலையளிக்கின்றது என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர்...

செம்மணி, ஈஸ்டர் குண்டுத் தாக்குதலுக்கு உடனடி சர்வதேச விசாரணை வேண்டும்

சர்ச்சைக்குரிய விடயங்கள் பாராளுமன்றத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களினால் முன்வைக்கப்படும் போது அவர்களின் நாடாளுமன்ற சிறப்புரிமைக்கும் அவர்களின் பாதுகாப்புக்கும் உத்தரவாதம் வழங்கவேண்டும்...