follow the truth

follow the truth

August, 24, 2025
HomeTOP1அடுத்த 2 வாரங்களில் வெள்ள இழப்பீடு தொடர்பான அமைச்சரவைப் பத்திரம்

அடுத்த 2 வாரங்களில் வெள்ள இழப்பீடு தொடர்பான அமைச்சரவைப் பத்திரம்

Published on

வெள்ளத்தினால் ஏற்பட்ட பயிர் சேதங்களுக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் எதிர்வரும் இரண்டு வாரங்களில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

கடந்த சில நாட்களாக பெய்து வரும் கடும் மழை காரணமாக அம்பாந்தோட்டை மாவட்டம் உட்பட பல பிரதேசங்களில் அறுவடைக்கு அருகில் இருந்த பல வயல் நிலங்கள் அழிவடைந்துள்ளன.

இதன்படி, வறட்சியால் ஏற்பட்ட பயிர் சேதம் தொடர்பான அமைச்சரவை பத்திரத்தில் தொகுக்கப்பட்டுள்ள வெள்ளத்தினால் ஏற்பட்ட பயிர் சேதங்களை மதிப்பிடுவதற்கான தகவல்கள் தற்போது சேகரிக்கப்பட்டு வருவதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

இதனிடையே, உள்ளூர் உருளைக்கிழங்கின் கொள்முதல் விலை குறைந்ததால் தாம் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதாக உருளைக்கிழங்கு விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

இறக்குமதி செய்யப்பட்ட உருளைக்கிழங்கு சந்தையில் தொடர்ந்தும் வெளியிடப்படுவதால் உள்ளூர் உருளைக்கிழங்கை கொள்வனவு செய்ய வர்த்தகர்கள் தயக்கம் காட்டுவதாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...