follow the truth

follow the truth

May, 12, 2025
HomeTOP1"தங்க சப்ரி"அனைத்து பாராளுமன்ற குழுக்களில் இருந்தும் நீக்கப்பட வேண்டும் - சஜித்

“தங்க சப்ரி”அனைத்து பாராளுமன்ற குழுக்களில் இருந்தும் நீக்கப்பட வேண்டும் – சஜித்

Published on

டுபாயிலிருந்து சுமார் எட்டு கோடி ரூபா பெறுமதியான தங்கம் மற்றும் கையடக்கத் தொலைபேசிகளை சட்டவிரோதமான முறையில் கொண்டு வந்த சம்பவத்தில் 75 இலட்சம் ரூபா அபராதம் விதிக்கப்பட்ட புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமை பாராளுமன்றத்தில் அவர் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்துக் குழுக்களில் இருந்தும் அவரை நீக்குமாறு முன்மொழிவொன்றினை சபாநாயகரிடம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அண்மையில் கையளித்துள்ளார்.

எவ்வாறாயினும், அலி சப்ரி ரஹீம் பாராளுமன்றத்தின் நெறிமுறைகள் மற்றும் சிறப்புரிமைகள் குழுவிற்கு விசாரணைக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளதால், அந்த குழுக்களின் பிரதிநிதியாக எம்.பி.க்கு சிக்கல் உள்ளது, எனவே விசாரணை முடியும் வரை அவர் அனைத்து குழுக்களையும் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டாம் என்று எதிர்க்கட்சித் தலைவர் பரிந்துரைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த முன்மொழிவு பாராளுமன்றத்தின் சமீபத்திய கோட்பாடு புத்தகத்திலும் சேர்க்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தி கட்சியும் அலி சப்ரி ரஹீமின் தவறான நடத்தை குறித்து அதிருப்தியை வெளிப்படுத்தும் பிரேரணையை சபாநாயகரிடம் கையளித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் கட்சிக்கு தடை

பங்களாதேஷ் நாட்டின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் 'அவாமி லீக்' கட்சியை, பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தடை...

காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வு ஏற்பட மத்தியஸ்தம் செய்ய அமெரிக்கா தயார்

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காம் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து பாகிஸ்தானில் உள்ள முகாம்களை இந்தியா தாக்கி அழித்தது. இதனையடுத்து...

தனக்குத் தானே சிலை வைத்த ட்ரம்ப்

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் ஓவல் மாளிகையில் தனக்கு தானே சிலை வைத்துள்ளது பேசுபொருளாகியுள்ளது. கடந்த ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின் போது...