“தங்க சப்ரி”அனைத்து பாராளுமன்ற குழுக்களில் இருந்தும் நீக்கப்பட வேண்டும் – சஜித்

586

டுபாயிலிருந்து சுமார் எட்டு கோடி ரூபா பெறுமதியான தங்கம் மற்றும் கையடக்கத் தொலைபேசிகளை சட்டவிரோதமான முறையில் கொண்டு வந்த சம்பவத்தில் 75 இலட்சம் ரூபா அபராதம் விதிக்கப்பட்ட புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமை பாராளுமன்றத்தில் அவர் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்துக் குழுக்களில் இருந்தும் அவரை நீக்குமாறு முன்மொழிவொன்றினை சபாநாயகரிடம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அண்மையில் கையளித்துள்ளார்.

எவ்வாறாயினும், அலி சப்ரி ரஹீம் பாராளுமன்றத்தின் நெறிமுறைகள் மற்றும் சிறப்புரிமைகள் குழுவிற்கு விசாரணைக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளதால், அந்த குழுக்களின் பிரதிநிதியாக எம்.பி.க்கு சிக்கல் உள்ளது, எனவே விசாரணை முடியும் வரை அவர் அனைத்து குழுக்களையும் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டாம் என்று எதிர்க்கட்சித் தலைவர் பரிந்துரைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த முன்மொழிவு பாராளுமன்றத்தின் சமீபத்திய கோட்பாடு புத்தகத்திலும் சேர்க்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தி கட்சியும் அலி சப்ரி ரஹீமின் தவறான நடத்தை குறித்து அதிருப்தியை வெளிப்படுத்தும் பிரேரணையை சபாநாயகரிடம் கையளித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here