ரயில் விபத்தில் உயிரிழந்த இளைஞனுக்கு இழப்பீடு

256

ஹொரபே புகையிரத நிலையத்தில் விபத்தில் உயிரிழந்த இளைஞனின் குடும்ப உறுப்பினர்களுக்கு ஐந்து இலட்சம் ரூபா நட்டஈடாக வழங்கப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

புகையிரத சாரதியின் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக நேற்று கண்டியில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த புகையிரதத்தின் கூரையில் பயணித்த இந்த இளைஞன் ஹொரேபே நிலையத்தின் கூரையில் மோதி ரயிலில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here