சித்திரவதை தொடர்பில் அறிவிக்க விசேட தொலைபேசி எண்

421

பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் புதிய மாணவர்களை சித்திரவதைக்கு உட்படுத்தும் முறைப்பாடுகள் குறித்து தெரிவிக்க காவல்துறை சிறப்பு தொலைபேசி எண் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

அதன் பிரகாரம் 076 545 3454 என்ற WhatsApp தொலைபேசி இலக்கத்தின் ஊடாக தகவல்களை வழங்க முடியும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

அது தொடர்பான நிகழ்வுகள் தொடர்பான புகைப்படங்கள் அல்லது காணொளிகளையும் அந்த எண்ணுக்கு அனுப்பி வைக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தவிர, 1997 என்ற எண்ணில் புதிய சித்திரவதை முறைப்பாடுகள் பற்றிய தகவல்களையும் தெரிவிக்க முடியும் எனத் தெரிவித்திருந்தார்.

24 மணி நேரமும் இந்த சேவை இடம்பெறும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here