follow the truth

follow the truth

May, 9, 2025
HomeTOP1சர்வதேச நாணய நிதியத்தின் முதலாவது மீளாய்வு ஆரம்பம்

சர்வதேச நாணய நிதியத்தின் முதலாவது மீளாய்வு ஆரம்பம்

Published on

சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட கடன் வசதியின் கீழ் முதலாவது மீளாய்வு இன்று (14) ஆரம்பமானது.

மீளாய்வில் பங்கேற்பதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் நாட்டுக்கு வந்துள்ளனர்.

அதன்படி, இன்று காலை ஆரம்பமான அமர்வில் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க கலந்துகொண்டுள்ளதாக நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த மீளாய்வில் இலங்கைக்கான விரிவான கடன் வசதியின் இரண்டாம் தவணையைப் பாதுகாப்பது, இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மையில் நம்பிக்கையை அதிகரிப்பதற்கு மிக முக்கியமான மைல்கல் என்று நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

இதன்படி 2024ஆம் ஆண்டில் எதிர்பார்க்கப்படும் பொருளாதார வளர்ச்சிக்கு நல்ல பாதை தயாராகும் என நிதியமைச்சர் தனது டுவிட்டர் கணக்கில் மீளாய்வு அமர்வு ஆரம்பிக்கும் முன்னர் குறிப்பிட்டிருந்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மே 12 முதல் 14 வரை மதுபான விற்பனை நிலையங்களுக்கு பூட்டு

உரிமம் பெற்ற அனைத்து மதுபான விற்பனை நிலையங்களும் மே மாதம் 12 ஆம் திகதி முதல் மே மாதம்...

இராணுவ ஹெலிகொப்டர் விபத்தில் 5 பேர் உயிரிழப்பு

இன்று காலை மாதுரு ஓயா நீர்த்தேக்கத்தில் வீழ்ந்து விபத்துற்குள்ளான ஹெலிகொப்டரில் இருந்து மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 12 பேரில்...

தேசிய வெசாக் வாரம் நாளை முதல் ஆரம்பம்

நாளை(10) முதல் 16 ஆம் திகதி வரை ஒரு வார கால வெசாக் வாரம் பிரகடனப்படுத்தப்படவுள்ளது. இதன் ஆரம்ப நிகழ்வு...