follow the truth

follow the truth

August, 24, 2025
HomeTOP1பிரதமர் - பசில் இடையே சந்திப்பு

பிரதமர் – பசில் இடையே சந்திப்பு

Published on

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் பொதுஜன ஐக்கிய முன்னணிக்கு இடையில் அண்மையில் (13) இடம்பெற்ற கலந்துரையாடலில், எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் மக்கள் நலன் மற்றும் நிவாரணங்களுக்காக அதிகளவிலான ஒதுக்கீடுகளை நிதியமைச்சர் என்ற முறையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கோருவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் அதனுடன் இணைந்துள்ள பிரதான அரசியல் கட்சியான மக்கள் ஐக்கிய முன்னணியின் பிரதிநிதிகளுக்கிடையில் இந்த கலந்துரையாடல் கொழும்பில் இடம்பெற்றது. இதில் பொதுஜன ஐக்கிய முன்னணியின் தலைவர் பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ ஆகியோர் கலந்துகொண்டனர்.

சர்வதேச நாணய நிதியம் கூட தற்போதைய பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் குறைந்த வருமானம் உள்ள மக்களுக்கும் அதிக நிவாரணங்களை வழங்க முன்வந்துள்ளதாக இங்கு கலந்துரையாடப்பட்டது.

நாட்டின் தற்போதைய அரசியல் சூழ்நிலை, கூட்டணி அரசியலின் பங்களிப்புகள், மக்களுக்கு நலன்புரி வசதிகள், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு வாழ்க்கைச் சுமை மற்றும் நிவாரணம், அரசு நிறுவனங்களின் முடிவெடுப்பதில் தொழிற்சங்கங்கள் மற்றும் ஊழியர்களுடன் உரையாடல், நிறுவனங்களின் மறுசீரமைப்பு பிரச்சினைகள், தொழிலாளர்களின் உரிமைகள், நலன் மற்றும் செழிப்பு மானியம், போதைப்பொருள் விவகாரம் உட்பட சுகாதார சேவையில் உள்ள பிரச்சினைகள், தேர்தல் முறை மற்றும் மேலும் விவாதிக்கப்பட வேண்டிய பல்வேறு கட்டளைகள் குறித்து இங்கு விரிவாக விவாதிக்கப்பட்டது.

சமுர்த்தி மானியம் தொடர்ந்தும் வழங்கப்பட வேண்டும் என இரண்டு கட்சிகளின் பிரதிநிதிகளும் வலியுறுத்தினர். ஏனெனில் பயனாளிகளின் எண்ணிக்கையை படிப்படியாக குறைக்க வேண்டும் என சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தி, பாராளுமன்றத்தின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம், நாடாளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜபக்ஷ, காமினி லொகுகே, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, எஸ்.எம்.சந்திரசேன, சஞ்சீவ எதிரிமான்ன, மக்கள் ஐக்கிய முன்னணியின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி திஸ்ஸ ஜயவர்தன யாப்பா, பிரதிச் செயலாளர் யதாமினி குணவர்தன, பாராளுமன்ற உறுப்பினர் குழு உறுப்பினர்களான விஜய ரத்நாயக்க மற்றும் மஹாநாம சமரநாயக்க ஆகியோர் குறித்த கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

முஸ்லிம் பெண்களின் கலாச்சார ஆடைகளை அகற்ற பணிப்புரை?

சுகாதாரத் துறையில் பணி புரியும் முஸ்லிம் பெண் ஊழியர்கள் அணியும் கலாச்சாரம் சார்ந்த ஆடைகளை அகற்றுமாறு திருகோணமலை பிராந்திய...

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...