கிராம அதிகாரிகளின் கொடுப்பனவுகளை அதிகரிக்க குழு

151

கிராம உத்தியோகத்தர்களின் கொடுப்பனவுகளை அதிகரிப்பது தொடர்பில் ஆராய விசேட குழுவொன்றை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் இன்று (16) நடைபெற்ற மாநாட்டில் உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த இதனைத் தெரிவித்தார்.

இரண்டு நாள் மாவட்டச் செயலர்கள் மாநாட்டில், கிராம அலுவலர்களின் நிலவும் பிரச்சினைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது.

கிராம உத்தியோகத்தர்களுக்கு தற்போது வழங்கப்படும் கொடுப்பனவுகளை அதிகரிப்பது தொடர்பில் விசேட குழுவொன்று தீர்மானிக்க வேண்டும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தங்களுக்கு உதவித்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என கிராம அலுவலர்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here