follow the truth

follow the truth

October, 22, 2024
HomeTOP1பதினைந்து வயது மாணவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியை கைது

பதினைந்து வயது மாணவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியை கைது

Published on

பதினைந்து வயது மாணவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சந்தேகத்தின் பேரில் 27 வயதுடைய ஆசிரியர் ஒருவரை வெலிகம பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இது தொடர்பில், மாணவனின் தாய் வெலிகம பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார்.

இந்த மாணவன், குறித்த சந்தேக நபரால் தனது வீட்டில் நடத்தப்பட்டதாக கூறப்படும் பயிற்சி வகுப்புக்கு சென்று வந்துள்ளார்.

இம்மாதம் 6ஆம் திகதி பயிற்சி வகுப்பிற்குச் சென்ற மாணவன் வீடு திரும்பாததால் மாணவனின் தாய், பயிற்சி வகுப்பு நடைபெறும் வீட்டுக்குச் சென்றுள்ளார்.

ஆசிரியர் வீட்டில் இல்லை என சந்தேக நபரின் தெரிவித்துள்ளார்.

ஆசிரியை மற்றும் அவரது மகன் அங்கு இல்லாததை அறிந்த அவர், பொலிசில் முறைப்பாடு செய்ததாக கூறப்படுகிறது.

உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த வெலிகம பொலிஸார் இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். சந்தேக நபர் சிறுவனை பாலியல் நடவடிக்கைகளுக்காக அழைத்துச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

பின்னர் கடந்த 12ஆம் திகதி வெலிகம பொலிஸாரின் நோட்டீசுக்கு அமைய சிறுவனும் சந்தேக நபரும் பொலிஸாரிடம் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

சந்தேக நபர் தன்னை கொழும்பு மற்றும் கண்டி பிரதேசங்களில் உள்ள ஹோட்டல்களுக்கு அழைத்துச் சென்றதாக இங்கு சிறுவன் தெரிவித்துள்ளார்.

இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ நாளை CIDயில் முன்னிலை

சட்டவிரோதமாகப் பதிவு செய்யப்பட்ட பி.எம்.டப்ளிவ் வாகனத்தைப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுத் தொடர்பில் நாளைய தினம் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில்...

ஏப்ரல் 21 தாக்குதல் – கம்மன்பிலவின் அறிக்கையை அரசு ஏற்றுக்கொள்ளப் போவதில்லை

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில நேற்று வெளியிட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்த விசாரணை குழு அறிக்கையை...

முறைகேடு அல்லது மோசடி குறித்து அறிவிக்க தொலைபேசி இலக்கம்

பொலிஸார் தொடர்பில் ஏதேனும் முறைகேடு அல்லது மோசடி நடந்தால் அது குறித்து தெரிவிக்க பொதுமக்களுக்காக பொலிஸார் அவசர தொலைபேசி...