follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP1அருவக்காலு சுகாதார கழிவுகளை சேகரிக்கும் திட்டம் தோல்வி

அருவக்காலு சுகாதார கழிவுகளை சேகரிக்கும் திட்டம் தோல்வி

Published on

அருவக்காலு சுகாதார கழிவுகளை சேகரிக்கும் திட்டத்திற்கு 21,045 மில்லியன் ரூபா செலவிடப்பட்ட போதிலும், கடந்த வருட இறுதி வரை இத்திட்டத்தினால் எதிர்பார்த்த பலன்களை பெற முடியவில்லை என தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளியிட்டுள்ள கணக்காய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டம் முடிவடைந்து மூன்று ஆண்டுகள் கடந்துவிட்டன.

வெள்ள அனர்த்த நிலைமைகளை கையாள்வதற்கு அருவக்காலு சுகாதார குப்பை சேகரிப்பு நிலையம் பொருத்தமான அமைப்பை தயாரிக்கவில்லை எனவும் கணக்காய்வு மூலம் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், 2021ஆம் ஆண்டு வெள்ளத்தில் மூழ்கி செயலிழந்த இயந்திரங்கள் கடந்த ஆண்டு இறுதிவரை மீட்கப்படவில்லை என்றும் கணக்காய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கை – பிரான்ஸ் இடையே உடன்படிக்கை கைச்சாத்து

இலங்கை மற்றும் பிரான்ஸ் இடையிலான வௌிநாட்டு கடன் மறுசீரமைப்பு செயன்முறையுடன் தொடர்புடைய கடன் மறுசீரமைப்புக்கான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது. கொழும்பில் இந்த...

இலங்கைக்கென தனித்துவமான உணவுப் பாதுகாப்பு குறியீட்டை உருவாக்குவது குறித்து அவதானம்

அடுத்த மூன்று மாதங்களுக்குள் இலங்கைக்கென தனித்துவமான உணவுப் பாதுகாப்பு குறியீட்டை உருவாக்குவதில் அரசாங்கம் கவனம் செலுத்துகிறது. உலக உணவுப் பாதுகாப்புக்...

எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை

மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழ்நிலை காரணமாக நாட்டில் பெட்ரோலியம் பற்றாக்குறை ஏற்படக்கூடும் என்று சமூக ஊடகங்களில் பரவி...