follow the truth

follow the truth

August, 24, 2025
HomeTOP1ரயில்வே மறுசீரமைப்பு இடைக்கால அறிக்கை அடுத்த மாதம் அமைச்சரவைக்கு

ரயில்வே மறுசீரமைப்பு இடைக்கால அறிக்கை அடுத்த மாதம் அமைச்சரவைக்கு

Published on

ரயில்வே திணைக்களத்தின் மறுசீரமைப்பு தொடர்பான இடைக்கால அறிக்கை அடுத்த மாத முற்பகுதியில் அமைச்சரவைக்கு அனுப்பி வைக்கப்படும் என நியமிக்கப்பட்ட குழு தெரிவித்துள்ளது.

அதன் தலைவரும் விமான போக்குவரத்து அமைச்சகத்தின் செயலாளருமான கே. டி. எஸ்.ருவன்சந்திர இது குறித்து தெரிவிக்கையில் அந்தக் குழு இன்று (20) மீண்டும் கூடும் என குறிப்பிட்டார்.

ரயில்வே துறையின் இயக்க இழப்பை ஈடுகட்டவும், திறமையான சேவையை வழங்கவும் முன்மொழிவுகளை இந்தக் குழு பரிசீலிக்கும்.

பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் குழுவும் இந்தக் குழுவில் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிரேரணைகளை தயாரிக்கும் போது அவர்களின் கருத்துக்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படும் என செயலாளர் தெரிவித்தார்.

ரயில்வே மறுசீரமைப்பு தொடர்பான முன்மொழிவுகள் அடங்கிய இறுதி அறிக்கை அடுத்த மாத இறுதியில் அமைச்சரவைக்கு அனுப்பப்பட உள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...