ரயில்வே திணைக்களத்தின் மறுசீரமைப்பு தொடர்பான இடைக்கால அறிக்கை அடுத்த மாத முற்பகுதியில் அமைச்சரவைக்கு அனுப்பி வைக்கப்படும் என நியமிக்கப்பட்ட குழு தெரிவித்துள்ளது.
அதன் தலைவரும் விமான போக்குவரத்து அமைச்சகத்தின் செயலாளருமான கே. டி. எஸ்.ருவன்சந்திர இது குறித்து தெரிவிக்கையில் அந்தக் குழு இன்று (20) மீண்டும் கூடும் என குறிப்பிட்டார்.
ரயில்வே துறையின் இயக்க இழப்பை ஈடுகட்டவும், திறமையான சேவையை வழங்கவும் முன்மொழிவுகளை இந்தக் குழு பரிசீலிக்கும்.
பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் குழுவும் இந்தக் குழுவில் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
பிரேரணைகளை தயாரிக்கும் போது அவர்களின் கருத்துக்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படும் என செயலாளர் தெரிவித்தார்.
ரயில்வே மறுசீரமைப்பு தொடர்பான முன்மொழிவுகள் அடங்கிய இறுதி அறிக்கை அடுத்த மாத இறுதியில் அமைச்சரவைக்கு அனுப்பப்பட உள்ளது.