follow the truth

follow the truth

August, 28, 2025
Homeபொலிட்டிக்கல் மேனியாமின் கட்டணம் மீண்டும்..?

மின் கட்டணம் மீண்டும்..?

Published on

நாட்டின் 70% மின்சாரத் தேவையை புதுப்பிக்கத்தக்க ஆற்றலைக் கொண்டு பூர்த்தி செய்வதில் கவனம் செலுத்தி, மின்சாரக் கட்டணத்தை குறைந்தபட்ச நிலைக்குக் கொண்டு வருவதற்கான திட்டங்களை வகுத்து வருவதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த தெரிவித்தார்.

2019 ஆம் ஆண்டு இலக்காகக் கொண்ட 70% புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி திட்டத்தை மேலும் நடைமுறைப்படுத்தி அந்த இலக்கை அடைய தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை வழங்கியுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.

நிலையான நாட்டிற்கு ஒரே பாதை என்ற தொனிப்பொருளில் நேற்று (20) ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மின்வலு மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் திரு.இந்திக்க அனுருத்த இதனைக் குறிப்பிட்டார்.

மேலும் கருத்து தெரிவித்த இந்திக்க அனுருத்த;

“புதுப்பிக்கத்தக்க எரிசக்தி இந்த நாட்டின் மிகப்பெரிய ஆற்றல் மூலமாகும். அதனை அபிவிருத்தி செய்வதன் மூலம் எரிபொருளுக்காக செலவிடப்படும் பணத்தை நாட்டில் வைத்துக்கொள்ள முடியும். எரிபொருளுக்காக செலவிடப்படும் தொகையை குறைப்பதன் மூலம் மின் கட்டணத்தை குறைந்தபட்ச நிலைக்கு கொண்டு வரவும் முடியும். மேலும், அந்த பணத்தை மற்ற வளர்ச்சி பணிகளுக்கு பயன்படுத்த முடியும்” என்றார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

முஸ்லிம் பெண்களின் கலாச்சார ஆடைகளை அகற்ற பணிப்புரை?

சுகாதாரத் துறையில் பணி புரியும் முஸ்லிம் பெண் ஊழியர்கள் அணியும் கலாச்சாரம் சார்ந்த ஆடைகளை அகற்றுமாறு திருகோணமலை பிராந்திய...

செலவுகளைக் கட்டுப்படுத்த பாடசாலைகளை மூட வேண்டிய அவசியமில்லை – பிரதமர்

கல்வி சீர்திருத்தங்கள் இன்னும் முழுமையாக வளர்ச்சியடையவில்லை, மேலும் அவை படிப்படியாக செயல்படுத்தப்படும் ஒரு நெகிழ்வான செயல்முறையாகும், விவாதங்கள், பரிந்துரைகள்...