கொழும்பின் பல பகுதிகளுக்கு இன்று (23) நீர் விநியோகம் நிறுத்தப்படுவதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
அதன்படி, கொழும்பு 11, 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளுக்கு இன்று மாலை 6:00 மணி முதல் காலை 6:00 மணி வரை 12 மணி நேரம் நீர் விநியோகம் தடைப்படும்.
எவ்வாறாயினும், அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக இந்த நீர் விநியோகம் இடைநிறுத்தப்படவுள்ளதாக அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.