follow the truth

follow the truth

August, 24, 2025
HomeTOP1"தயாசிறி வரலாம்: ஆனால் பதவிகள் இல்லை"

“தயாசிறி வரலாம்: ஆனால் பதவிகள் இல்லை”

Published on

நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவை எந்த நேரத்திலும் கட்சி ஏற்கத் தயார் எனவும் ஆனால் அவருக்கு தலைவர் மற்றும் செயலாளர் பதவிகளை வழங்குவதில் நம்பிக்கை இல்லை எனவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

நேற்று(24) கொழும்பு டார்லி வீதியிலுள்ள கட்சியின் தலைமையகத்தில் கட்சியின் தொகுதி மற்றும் மாவட்ட அமைப்பாளர்கள் மற்றும் உப அமைப்புப் பிரதிநிதிகளுடனான சந்திப்பின் போதே முன்னாள் ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

“தயாசிறி விரும்பினால் எந்த பிரச்சினையும் இல்லை. அவர் எந்த நேரத்திலும் வரலாம்” என்று மைத்திரிபால சிறிசேன அங்கு கூறினார்.

கட்சியின் செயலாளர் பதவியில் இருந்து தயாசிறி ஜயசேகரவை நீக்கும் தீர்மானம் தொடர்பில், மாவட்ட மற்றும் தொகுதி அமைப்பாளர்களுக்கு முன்னாள் ஜனாதிபதி விரிவாக உண்மைகளை விளக்கினார்.

அடுத்த வருடம் தேர்தல் ஆண்டாகும் என்றும், ஓரிரு தேர்தல்கள் வரலாம் என்பதால், அதற்கு தயாராகுமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாகவும் கட்சியின் தலைவர் மேலும் குறிப்பிட்டார்.

அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா, மஹிந்த அமரவீர, நாடாளுமன்ற உறுப்பினர்களான துமிந்த திஸாநாயக்க, ஷான் விஜயலால் டி சில்வா ஆகியோரும் இந்த கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...