IMF பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் நாளை கலந்துரையாடல்

432

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையில் நாளை (26) முக்கிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் விரிவான கடன் வசதியின் கீழ் இலங்கைக்கு வழங்கப்பட்ட முதல் கடன் தவணை தொடர்பான மீளாய்வு இங்கு நடத்தப்பட உள்ளது.

இந்தக் கலந்துரையாடல் தொடர் கடந்த 14ஆம் திகதி ஆரம்பமாகியிருந்தது.

இந்த மீளாய்வு கலந்துரையாடல் தொடரில் இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட கடன் வசதியின் இரண்டாவது தவணை குறித்தும் விவாதிக்கப்படும்.

அதன் பின்னர் இலங்கைக்கான இரண்டாம் தவணை கடனுதவி தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் உடன்படிக்கைக்கு வரவுள்ளது.

Whatsapp Channel : https://rb.gy/0b3k5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here