கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக பொலிஸாரின் பிடியில் இருந்து மறைந்திருந்து, கடந்த ஜனவரி மாதம் கைது செய்யப்பட்ட மேட்டியோ மெசினா (Matteo Messina) உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
Matteo Messina இற்கு 61 வயதாகின்ற நிலையில், இவர் ஒரு புற்றுநோயாளி.
பல கொலைகளுக்கு பொறுப்பாளியான பெரும் மூளையாக செயற்பட்ட இத்தாலியினால் லேபல் அடிக்கப்பட்ட ‘மாபியா போஸ்’ என்றழைக்கப்படும் மேட்டியோ மெசினாவை கைது செய்ய 30 வருட சோதனைகள் மற்றும் தொடர் நடவடிக்கைகள் தேவைப்பட்டிருந்ததாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
இறுதியாக, கடந்த ஜனவரி மாதம், புற்றுநோய் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது அவர் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட பின்னர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.