பங்குதாரர்களின் இணக்கப்பாட்டின் பிரகாரம் அதிபர் சேவையில் மூன்றாம் தர பதவிகளுக்கான நியமனங்களை மேற்கொள்ள கல்வி அமைச்சு நடவடிக்கை எடுக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பான 4718 பதவிகளுக்கான நியமனம் தொடர்பாக நீதிமன்றத்தின் முன் ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நியமனங்கள் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்களை பரிசீலித்த உச்ச நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.