follow the truth

follow the truth

May, 3, 2025
HomeTOP1A/L பரீட்சை திகதிகள் தொடர்பில் இதுவரை இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை

A/L பரீட்சை திகதிகள் தொடர்பில் இதுவரை இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை

Published on

கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கான திகதிகள் தொடர்பில் இதுவரை இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

எதிர்வரும் திங்கட்கிழமைக்குள் இறுதித் தீர்மானம் அறிவிக்கப்படும் என அமைச்சின் செயலாளர் நிஹால் ரணசிங்க தெரிவித்தார்.

இதற்கு முன்னர் கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த, தற்போது திட்டமிடப்பட்டுள்ள உயர்தரப் பரீட்சை திகதிகள் திருத்தப்பட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

கடந்த 21ஆம் திகதி பாராளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை விடுத்து அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

முன்னதாக, 2023 உயர்தரப் பரீட்சை நவம்பர் 27, 2023 இல் தொடங்கத் திட்டமிடப்பட்டது, ஆனால் 2022 பரீட்சை முடிவுகளை வெளியிடுவதில் சுமார் 3 மாதங்கள் தாமதம் ஏற்பட்டதால் நிலைமையை அமைச்சர் நீண்ட நேரம் விளக்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

எதிர்வரும் 6 ஆம் திகதி மதுபானசாலைகளுக்குப் பூட்டு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் காரணமாக நாடளாவிய ரீதியில் அனைத்து மதுபானசாலைகளும் எதிர்வரும் 6 ஆம் திகதி மூடப்படும் என...

LTTE வசமிருந்து இராணுவத்தினால் மீட்கப்பட்ட தங்கம், வெள்ளி பதில் பொலிஸ்மா அதிபரிடம் கையளிப்பு

யுத்த காலத்தில் LTTE வசமிருந்து இராணுவத்தினால் கைப்பற்றப்பட்ட பொதுமக்களின் தங்கம் மற்றும் வௌ்ளி பதில் பொலிஸ்மா அதிபரிடம் உத்தியோகபூர்வமாக...

தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் நாளை நள்ளிரவுடன் நிறைவு

வாக்கெடுப்பிற்கு நாற்பத்தெட்டு(48) மணி நேரத்திற்கு முன்னர் அதாவது மே மாதம் 03 ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணிக்குப்...