follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP1சிபெட்கோ, ஐஓசி மற்றும் சினோபெக் பெட்ரோல் விலைகளில் திருத்தம்

சிபெட்கோ, ஐஓசி மற்றும் சினோபெக் பெட்ரோல் விலைகளில் திருத்தம்

Published on

நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் சிபெட்கோ, ஐஓசி ஆகிய எரிபொருள் நிலையங்கள் எரிபொருள் விலையை அதிகரித்துள்ளது.

இதன்படி, ஒக்டேன் 92 பெட்ரோல் லீட்டர் 4 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு, அதன் புதிய விலை 365 ரூபாவாக விற்பனை செய்யப்படும்.

ஒக்டேன் 95 பெட்ரோல் லீட்டர் 3 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு, அதன் புதிய விலை 420 ரூபாவாக விற்பனை செய்யப்படும்.

இதேவேளை, லங்கா ஒட்டோ டீசல் லீட்டர் 10 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதோடு, அதன் புதிய விலை 351 ரூபாவாகும்.

லங்கா சுப்பர் டீசல் லீட்டர் ஒன்றின் விலை 62 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதோடு, அதன் புதிய விலை 421 ரூபாவாகும்.

மண்ணெண்ணெய் 11 ரூபாவால் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, நேற்று(01) மாலை 6 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் சினொபெக் நிறுவனமும் எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொண்டுள்ளது.

இதன்படி ஒக்டேன் 95 ரக பெட்ரோல் லீட்டர் ஒன்றின் விலையை 6 ரூபாவால் அதிகரித்துள்ளது. அதன்படி அதன் புதிய விலை 420 ரூபாவாகும்.

அதே நேரம் ஒட்டோ டீசல் லீட்டர் ஒன்றின் விலையை 10 ரூபா அதிகரித்துள்ளது. இதன் படி அதன் புதிய விலை 348 ரூபா ரூபாவாகும்.

அதே நேரம் லங்கா சுப்பர் டீசல் லீட்டர் ஒன்றின் விலை 61 ரூபா அதிகரித்துள்ளதுடன்அதன் புதிய விலை 417 ரூபாவாகும்.

எனினும் ஒக்டேன் 92 ரக பெட்ரோல் விலையில் எந்த திருத்தமும் மேற்கொள்ளப்படாத நிலையில் 358 ரூபாவிற்கே விற்பனை செய்யப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Whatsapp Channel : https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கை – பிரான்ஸ் இடையே உடன்படிக்கை கைச்சாத்து

இலங்கை மற்றும் பிரான்ஸ் இடையிலான வௌிநாட்டு கடன் மறுசீரமைப்பு செயன்முறையுடன் தொடர்புடைய கடன் மறுசீரமைப்புக்கான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது. கொழும்பில் இந்த...

இலங்கைக்கென தனித்துவமான உணவுப் பாதுகாப்பு குறியீட்டை உருவாக்குவது குறித்து அவதானம்

அடுத்த மூன்று மாதங்களுக்குள் இலங்கைக்கென தனித்துவமான உணவுப் பாதுகாப்பு குறியீட்டை உருவாக்குவதில் அரசாங்கம் கவனம் செலுத்துகிறது. உலக உணவுப் பாதுகாப்புக்...

எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை

மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழ்நிலை காரணமாக நாட்டில் பெட்ரோலியம் பற்றாக்குறை ஏற்படக்கூடும் என்று சமூக ஊடகங்களில் பரவி...