follow the truth

follow the truth

July, 10, 2025
HomeTOP1நீங்களும் ONLINE LOAN எடுப்பவரா? அப்படியானால் இதைப் பற்றி எச்சரிக்கையாக இருங்கள்

நீங்களும் ONLINE LOAN எடுப்பவரா? அப்படியானால் இதைப் பற்றி எச்சரிக்கையாக இருங்கள்

Published on

சமூக ஊடக வலையமைப்புகள் மற்றும் ஆன்லைன் முறைகள் மூலம் அதிக வட்டிக்கு எந்தவித சட்ட கட்டமைப்பும் இன்றி பணம் வழங்கும் நிறுவனங்களால் மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக ஆன்லைன் நிதி மோசடிகளால் பாதிக்கப்பட்டோர் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.

தற்போது ஆன்லைன் முறைகள் மூலம் உடனடி கடன் வழங்கும் நபர்கள் மற்றும் நிறுவனங்கள் பற்றி பேசப்படுகிறது.

இவ்வாறான நிறுவனங்களில் உடனடி கடன் பெற்ற சிலர் தாம் எதிர்நோக்கும் அசௌகரியங்கள் தொடர்பில் பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகளை கூட சமர்ப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறானதொரு பின்னணியில் சமூக வலைத்தளங்கள் மற்றும் இணையவழி முறைகள் மூலம் கடன் பெற்று அசௌகரியங்களுக்கு உள்ளானவர்கள் ஒன்றிணைந்து இணைய நிதி மோசடிகளால் பாதிக்கப்பட்டவர்களின் சங்கம் என்ற சங்கத்தை உருவாக்கி நேற்று (01) கொழும்பில் ஊடகவியலாளர் சந்திப்பை நடத்தியுள்ளனர்.

Whatsapp Channel : https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இறக்குமதி பால்மா விலை 100 ரூபாவால் அதிகரிப்பு

இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால் மா பொதியொன்றின் விலை 100 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பால் மா...

இலங்கைக்கு 30 வீத வரி விதிப்பு – அமெரிக்க ஜனாதிபதி அறிவிப்பு

இலங்கையின் உற்பத்தி பொருட்களுக்கு 30 வீத தீர்வை வரியை அறவிடவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். ஜனாதிபதி...

களுத்துறை நகர அபிவிருத்தித் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல்

மேல் மற்றும் தென் மாகாணங்களுக்கு இடையிலான பிரதான நகரமாக களுத்துறை நகரத்தை அபிவிருத்தி செய்யும் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான...