follow the truth

follow the truth

August, 27, 2025
Homeபொலிட்டிக்கல் மேனியாடிரானுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை

டிரானுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை

Published on

பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸுக்கு எதிராக சபாநாயகரிடம் நம்பிக்கையில்லாப் பிரேரணையை அடுத்த வாரம் கையளிக்கத் தயாராகி வருவதாக அறியமுடிகின்றது.

களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் லலித் எல்லாவல உள்ளிட்ட சுதந்திர மக்கள் சபை எம்.பி.க்கள் குழுவொன்றே இவ்வாறு தயாராகி வருகின்றது.

இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கும் ஆதரவளிப்பதாக லலித் எல்லாவல தெரிவித்தார்.

நாட்டில் தொடர்ச்சியாக இடம்பெறும் படுகொலைகளை கட்டுப்படுத்த பொது பாதுகாப்பு அமைச்சருக்கு தமது குழுவினர் ஒரு மாத கால அவகாசம் வழங்கியுள்ளதாகவும், காலம் கடந்தாலும் நாட்டில் குற்றச்செயல்கள் அப்படியே இருப்பதாகவும் லலித் எல்லாவல எம்.பி தெரிவித்தார்.

இதன் காரணமாக பொது பாதுகாப்பு அமைச்சருக்கு எதிராக சபாநாயகரிடம் நம்பிக்கையில்லா பிரேரணை விரைவில் கையளிப்பதாகத் தெரிவித்த எல்லாவல, நம்பிக்கையில்லாப் பிரேரணையை முன்வைப்பதற்கு போதுமான உண்மைகள் இருப்பதாகவும் தெரிவித்தார்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

முஸ்லிம் பெண்களின் கலாச்சார ஆடைகளை அகற்ற பணிப்புரை?

சுகாதாரத் துறையில் பணி புரியும் முஸ்லிம் பெண் ஊழியர்கள் அணியும் கலாச்சாரம் சார்ந்த ஆடைகளை அகற்றுமாறு திருகோணமலை பிராந்திய...

செலவுகளைக் கட்டுப்படுத்த பாடசாலைகளை மூட வேண்டிய அவசியமில்லை – பிரதமர்

கல்வி சீர்திருத்தங்கள் இன்னும் முழுமையாக வளர்ச்சியடையவில்லை, மேலும் அவை படிப்படியாக செயல்படுத்தப்படும் ஒரு நெகிழ்வான செயல்முறையாகும், விவாதங்கள், பரிந்துரைகள்...