follow the truth

follow the truth

August, 24, 2025
HomeTOP1"இந்த சம்பவத்திற்கு நீதிபதி பொறுப்பேற்க வேண்டும்"

“இந்த சம்பவத்திற்கு நீதிபதி பொறுப்பேற்க வேண்டும்”

Published on

ஏதேனும் செல்வாக்கு காரணமாக அச்சுறுத்தல் ஏற்பட்டால், தன்னை அச்சுறுத்திய நபருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கான சகல அதிகாரங்களும் முல்லைத்தீவு முன்னாள் மாவட்ட நீதிபதிக்கு இருக்கும் போது, குறித்த சம்பவம் தொடர்பில் அவர் பொறுப்பேற்க வேண்டும் என கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ இன்று (3) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

மேலும், சம்பவத்தின் பொறுப்பை அரசாங்கத்தின் மீது சுமத்த முயற்சிக்கக் கூடாது என்றும் அமைச்சர் கூறினார்.

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ஏதோ செல்வாக்கு காரணமாக மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்தால், அதுகுறித்து வெளிநாட்டிற்குச் சென்று கடிதம் அனுப்புவதும், அவ்வாறு செல்வாக்கு இருந்ததா என்பதும் புதிராகவே உள்ளது.

அவ்வாறு செல்வாக்கு செலுத்துபவர்கள் மீது சம்மன் அனுப்பவும் நடவடிக்கை எடுக்கவும் அரசியல் சாசனத்தின்படி நீதிபதிகளுக்கே அதிகாரம் உள்ளது என்றார்.

அவ்வாறான அதிகாரம் இருந்தும் அவர் ஏன் அந்த அதிகாரத்தை பயன்படுத்தவில்லை என்பது கேள்விக்குறி எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்

Whatsapp Channel : https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...