follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP1"இந்த சம்பவத்திற்கு நீதிபதி பொறுப்பேற்க வேண்டும்"

“இந்த சம்பவத்திற்கு நீதிபதி பொறுப்பேற்க வேண்டும்”

Published on

ஏதேனும் செல்வாக்கு காரணமாக அச்சுறுத்தல் ஏற்பட்டால், தன்னை அச்சுறுத்திய நபருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கான சகல அதிகாரங்களும் முல்லைத்தீவு முன்னாள் மாவட்ட நீதிபதிக்கு இருக்கும் போது, குறித்த சம்பவம் தொடர்பில் அவர் பொறுப்பேற்க வேண்டும் என கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ இன்று (3) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

மேலும், சம்பவத்தின் பொறுப்பை அரசாங்கத்தின் மீது சுமத்த முயற்சிக்கக் கூடாது என்றும் அமைச்சர் கூறினார்.

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ஏதோ செல்வாக்கு காரணமாக மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்தால், அதுகுறித்து வெளிநாட்டிற்குச் சென்று கடிதம் அனுப்புவதும், அவ்வாறு செல்வாக்கு இருந்ததா என்பதும் புதிராகவே உள்ளது.

அவ்வாறு செல்வாக்கு செலுத்துபவர்கள் மீது சம்மன் அனுப்பவும் நடவடிக்கை எடுக்கவும் அரசியல் சாசனத்தின்படி நீதிபதிகளுக்கே அதிகாரம் உள்ளது என்றார்.

அவ்வாறான அதிகாரம் இருந்தும் அவர் ஏன் அந்த அதிகாரத்தை பயன்படுத்தவில்லை என்பது கேள்விக்குறி எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்

Whatsapp Channel : https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கை – பிரான்ஸ் இடையே உடன்படிக்கை கைச்சாத்து

இலங்கை மற்றும் பிரான்ஸ் இடையிலான வௌிநாட்டு கடன் மறுசீரமைப்பு செயன்முறையுடன் தொடர்புடைய கடன் மறுசீரமைப்புக்கான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது. கொழும்பில் இந்த...

இலங்கைக்கென தனித்துவமான உணவுப் பாதுகாப்பு குறியீட்டை உருவாக்குவது குறித்து அவதானம்

அடுத்த மூன்று மாதங்களுக்குள் இலங்கைக்கென தனித்துவமான உணவுப் பாதுகாப்பு குறியீட்டை உருவாக்குவதில் அரசாங்கம் கவனம் செலுத்துகிறது. உலக உணவுப் பாதுகாப்புக்...

எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை

மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழ்நிலை காரணமாக நாட்டில் பெட்ரோலியம் பற்றாக்குறை ஏற்படக்கூடும் என்று சமூக ஊடகங்களில் பரவி...