follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP1ETF - EPF ஒரு சுயாதீன குழுவின் கீழ்

ETF – EPF ஒரு சுயாதீன குழுவின் கீழ்

Published on

ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் ஆகிய இரண்டும் ஒன்றிணைக்கப்பட்டு சுயாதீன சபையின் கீழ் பணிகள் முன்னெடுக்கப்படும் என நம்புவதாக ரணில் விக்கிரமசிங்க இன்று (04) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

சுங்கக் கட்டளைச் சட்டத்தின் கீழ் முன்மொழியப்பட்ட மூன்று விதிமுறைகள் மற்றும் சிறப்புப் பொருட்கள் வரிச் சட்டத்தின் கீழ் உள்ள விதிகள் இன்று (04) பாராளுமன்றத்தில் விவாதிக்கப்படவுள்ள நிலையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்திற்கு வருகை தந்திருந்தார்.

இதன்போது ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்ன ஈபிஎப் நிதியின் சுயாதீன முகாமைத்துவம் தொடர்பில் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

“இரு தரப்பும் தான் சொல்வது சரி என்கிறீர்கள். அப்படியானால் இரு தரப்பினரும் ஏன் இணைந்து செயல்பட முடியாது?” என்று ஜனாதிபதி இதன்போது கேட்டிருந்தையும் குறிப்பிடத்தக்கது.

Whatsapp Channel : https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சிரேஷ்ட பிரஜைகளுக்கான விசேட நிலையான வைப்புதிட்டம்

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட உரையில் முன்வைக்கப்பட்ட சிரேஷ்ட பிரஜைகளுக்கான விசேட நிலையான வைப்புத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம்...

தெஹ்ரானில் உள்ள இலங்கைத் தூதரகம் தற்காலிகமாக இடமாற்றம்

இஸ்ரேல் - ஈரான் இடையே ஏற்பட்டுள்ள போர் நிலைமையைக் கருத்தில் கொண்டு, ஈரான் தெஹ்ரானில் உள்ள இலங்கைத் தூதரகத்தை...

பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு ஜனாதிபதி தலைமையில் கூடியது

பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு பாதுகாப்பு அமைச்சர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (17)...