வெள்ளத்தினால் சேதமடைந்த பயிர்ச்செய்கைகளுக்கு இழப்பீடு வழங்குவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபை தெரிவித்துள்ளது.
இதற்கான கணக்கீடுகள் தென் மாகாணத்தில் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சபையின் தலைவர் மத்துமபண்டார வீரசேகர தெரிவித்துள்ளார்.
மாவட்ட அலுவலக மட்டத்தில் இதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
வறட்சியினால் ஏற்பட்ட சேதங்கள் கணக்கிடப்பட்டு அதற்கான கொடுப்பனவுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும், இந்தக் கணக்கீடுகள் அனைத்தும் நிறைவு செய்யப்பட்டு விரைவில் பணம் வழங்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.