follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP1ரயில்வே பணிப்புறக்கணிப்பு : நண்பகலுக்கு முன் பணிக்கு சமூகமளிக்க அறிவிப்பு

ரயில்வே பணிப்புறக்கணிப்பு : நண்பகலுக்கு முன் பணிக்கு சமூகமளிக்க அறிவிப்பு

Published on

ரயில்வே துணை கட்டுப்பாட்டாளர்களின் விடுமுறை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இரத்து செய்யப்பட்டுள்ளது.

இதன்படி, இன்று (05) நண்பகல் 12 மணிக்கு முன்னர் பணிக்கு சமூகமளிக்குமாறு புகையிரத பிரதி கட்டுப்பாட்டாளர்களுக்கு ரயில்வே பொது முகாமையாளர் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், ரயில் உட்பட அனைத்து பொது போக்குவரத்து சேவைகளையும் அத்தியாவசிய சேவையாக மாற்றுவதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்தை கடுமையாக நடைமுறைப்படுத்த அரசாங்கம் நேற்று (04) இரவு தீர்மானித்துள்ளது.

செப்டெம்பர் 12ஆம் திகதி ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டார்.

இந்த வர்த்தமானி அறிவித்தலின் கீழ் பணிக்கு சமூகமளிக்காத புகையிரத மற்றும் பொது போக்குவரத்து சேவைகளின் அனைத்து ஊழியர்களுக்கும் சட்டத்தை அமுல்படுத்துமாறு அரசாங்கம் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது ஒரு மாத காலத்திற்கு செல்லுபடியாகும்.

Whatsapp Channel : https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியவர்கள் குறித்து தகவல் வழங்க WhatsApp இலக்கம்

பிள்ளைகளால் புறக்கணிக்கப்பட்டு, தங்குமிடம் தேவைப்படும் முதியவர்கள் குறித்த தகவல்களை வழங்குவதற்காக முதியோருக்கான தேசிய செயலகம் வட்ஸ்-அப் இலக்கமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி,...

லெபனானில் வசிக்கும் இலங்கையர்களுக்கு விசேட அறிவித்தல்

ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் நிலவும் பதற்றமான சூழ்நிலை காரணமாக லெபனானில் வசிக்கும் இலங்கையர்களுக்கு அங்குள்ள இலங்கை தூதரகம் அறிவிப்பை...

அரசு உள்ளூராட்சி மன்ற வழிகாட்டுதல்களை அப்பட்டமாக மீறியுள்ளது

உள்ளூராட்சி மன்றமொன்றில் ஒட்டுமொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 50% க்கும் அதிகமான உறுப்பினர்களை எந்தவொரு அரசியல் கட்சியோ அல்லது சுயேச்சைக்...