follow the truth

follow the truth

May, 20, 2024
HomeTOP1ரயில்வே பணிப்புறக்கணிப்பு : நண்பகலுக்கு முன் பணிக்கு சமூகமளிக்க அறிவிப்பு

ரயில்வே பணிப்புறக்கணிப்பு : நண்பகலுக்கு முன் பணிக்கு சமூகமளிக்க அறிவிப்பு

Published on

ரயில்வே துணை கட்டுப்பாட்டாளர்களின் விடுமுறை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இரத்து செய்யப்பட்டுள்ளது.

இதன்படி, இன்று (05) நண்பகல் 12 மணிக்கு முன்னர் பணிக்கு சமூகமளிக்குமாறு புகையிரத பிரதி கட்டுப்பாட்டாளர்களுக்கு ரயில்வே பொது முகாமையாளர் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், ரயில் உட்பட அனைத்து பொது போக்குவரத்து சேவைகளையும் அத்தியாவசிய சேவையாக மாற்றுவதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்தை கடுமையாக நடைமுறைப்படுத்த அரசாங்கம் நேற்று (04) இரவு தீர்மானித்துள்ளது.

செப்டெம்பர் 12ஆம் திகதி ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டார்.

இந்த வர்த்தமானி அறிவித்தலின் கீழ் பணிக்கு சமூகமளிக்காத புகையிரத மற்றும் பொது போக்குவரத்து சேவைகளின் அனைத்து ஊழியர்களுக்கும் சட்டத்தை அமுல்படுத்துமாறு அரசாங்கம் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது ஒரு மாத காலத்திற்கு செல்லுபடியாகும்.

Whatsapp Channel : https://rb.gy/0b3k5

LATEST NEWS

MORE ARTICLES

சஜித் – அநுர விவாதம் ஜூன் 6

பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்கவுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையிலான விவாதத்திற்கு சஜித் பிரேமதாச வழங்கிய திகதிகளில்...

கெஹெலிய உள்ளிட்ட 8 பேருக்கு மீளவும் விளக்கமறியல்

தரமற்ற இம்யூனோகுளோபுலின் தடுப்பூசியை இறக்குமதி செய்த குற்றச்சாட்டில் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 8 பேர்...

புத்தளத்தில் பாடசாலைகளுக்கு நாளையும் விடுமுறை

சீரற்ற காலநிலை தொடர்வதால் புத்தளம் மாவட்ட பாடசாலைகளுக்கு நாளையும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. நாட்டில் நிலவும் சீரற்ற...